கீழடி: "தமிழர் வரலாற்றை மறைப்பது ஏன்?" - மாஃபா பாண்டியராஜனுக்கு எழிலன் பதிலடி!
தென்காசியில் பயங்கரம்! கழன்று ஓடிய அரசுப் பேருந்தின் பின் சக்கரங்கள்!
தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் சாலையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் இரண்டும், தனியாகக் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
சக்கரங்கள் கழன்ற பேருந்தில் 87 பயணிகள் இருந்தனர். இதில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும், மற்ற பயணிகள் யாருக்கும் எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, திடிரென, அதன் பின்பக்க சக்கரங்கள் மட்டும், பேருந்திலிருந்து உடைந்து இரண்டும் தனியாக சாலையில் கழன்றுவிட்டது. பேருந்து மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், அப்படியே தரையில் பேருந்து இறங்கிவிட்டது.
பேருந்துக்கு முன்போ, பின்னோ வேறு எந்த பெரிய வாகனங்களும் வராததால் நல்வாய்ப்பாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தினால், திருமங்கலம் - கொல்லம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து சாலையோரம் நகர்த்தப்பட்டு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகள் அனைவரும், தனியாகக் கழன்றுபோன சக்கரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.