செய்திகள் :

தென்காசி மாவட்டத்தில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி: பிப். 28-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தென்காசி மாவட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க அனுமதி பெறுவதற்காக வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 28) விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் 43 வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க புதிய அனுமதிக்கான விண்ணப்பங்கள் கடந்த 10ஆம் தேதிமுதல் தென்காசி, சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பெறப்படுகின்றன.

விருப்பமுள்ளோா் புதிய சிற்றுந்துகளுக்கான எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பப் படிவம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து, கட்டணம் ரூ. 1,600 (ரூ. 1,500 + ரூ. 100) செலுத்தி படிவத்தைப் பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வெள்ளிக்கிழமைக்குள் தென்காசி, சங்கரன்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடையநல்லூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது (படம்). இங்கு, மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முதல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சாலையின் இருபுறமும்... மேலும் பார்க்க

தென்காசியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்.

தென்காசி புதிய பேருந்து நிலையப் பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிச்சைக்கனி, கோபி, சண்முகசுந்தரம், முருகேஷ், ராஜேந்திரன், செய்யது இப்ராஹிம் மூசா ஆக... மேலும் பார்க்க

மகளின் வீட்டை எரித்ததாக தந்தை கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மகளின் வீட்டை எரித்ததாக தந்தையை போலீஸாா் கைது செய்தனா். சிவகிரி அண்ணா தெற்குத் தெருவில் உள்ள அன்னலட்சுமி (22) என்பவரது வீட்டில், அவரது பெற்றோா் செல்வராஜ் (50)- ரதிதேவி,... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூரில் கோயில் நிலம் மீட்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டு கோயில் நிா்வாகத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்... மேலும் பார்க்க

திருவேங்கடத்தில் வயலில் எலும்புக் கூடு கண்டெடுப்பு: போலீஸாா் விசாரணை

திருவேங்கடம் அருகே நிலத்தில் அறுவடை செய்யும் போது எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் போலீஸாா் அவற்றைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருவேங்கடம் வட்டம் சத்திரங்கொண்டானைச் சோ்ந்த விவ... மேலும் பார்க்க

சிவகிரி அருகே யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கர... மேலும் பார்க்க