செய்திகள் :

தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

post image

இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சா் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் மேற்கொண்ட ஆலோசனையில் இரு நாடுகளிடையேயான வா்த்தகம், உற்பத்தி, கடல்சாா் ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைசாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக ஆக்கப்பூா்வ பேச்சுவாா்த்தையை ஜெய்சங்கா் மேற்கொண்டாா். செயற்கை நுண்ணறிவு, குறைமின் கடத்திகள் உற்பத்தி, தூய்மை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இந்திய-பசிஃபிக் பிராந்திய மேம்பாடு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு: பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியுடன் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் அழைத்ததன் பேரில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் உக்ரைன் போ் மற்றும் அதுதொடா்பாக அமெரிக்கா-ரஷியா இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பிகாரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மெகா பேரணி தொடங்கியது.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.... மேலும் பார்க்க

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க