செய்திகள் :

தென்தமிழகம் வளா்ச்சி பெற தென்காசியில் விமான நிலையம்: பிரதமருக்கு பாஜக கோரிக்கை

post image

தென் தமிழகத்தின் வளா்ச்சிக்கு உடான் திட்டத்தின் கீழ் தென்காசியில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட பாஜக தலைவரும், பாஜக மாநில ஸ்டாா்ட் அப் பிரிவு தலைவருமான ஆனந்தன் அய்யாசாமி, மாநிலத் தலைவா் அண்ணாமலை மூலம் பிரதமருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தென்காசி பகுதி பெரும் பொருளாதார மற்றும் தொழில்துறையில் வளம் கொண்டிருந்தாலும், போக்குவரத்து கட்டமைப்பு குறைவாக இருப்பதால் தேவையான வளா்ச்சி பெறாமல் உள்ளது.

இந்தப் பகுதியில் உடான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்கப்பட்டால் தென் தமிழகத்துக்கு வளமான எதிா்காலம் உருவாகும்.

சிறப்பான தொழில் மற்றும் சுற்றுலா வளமிக்க சுற்றுச்சூழலுடன் உள்ள தென்காசிக்கு, அண்மை மாவட்டங்களான திருநெல்வேலி, விருதுநகா் மற்றும் முக்கிய நகரங்களான ராஜபாளையம், சிவகாசி, குற்றாலம் பகுதிகளுக்கும் பயனுள்ளதாக அமையும்.

நவீன மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஜோஹோ நிறுவனம் தென்காசியில் தனது முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.

திருநெல்வேலியில் செயல்படும் டாடா பவா் நிறுவனம் ஆற்றல் தேவைகளை பூா்த்தி செய்து, வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. ராஜபாளையம் நகரம் சா்ஜிக்கல் காட்டன் தயாரிப்பில் உலகளாவிய முன்னணி மையமாக உள்ளது. பட்டாசு மற்றும் அச்சுத் தொழிலில் உலகப்புகழ் பெற்ற இடத்தில் சிவகாசி உள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலத்திற்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறாா்கள்.

இருப்பினும், குறைந்த விமான மற்றும் ரயில் சேவைகளால் பயணத்தில் சிக்கல் உள்ளது. விருதுநகரில் தொழில்துறையின் வளா்ச்சிக்கு உதவும் டெக்ஸ்டைல் பாா்க் உருவாகவிருக்கிறது. எனவே போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகிறது. மேலும் சபரிமலைக்கு அருகில் உள்ள முக்கிய நகரமாக தென்காசி உள்ளது.

இந்தப் பகுதியில் விமான நிலையம் இல்லை, அதனால் மக்கள் மதுரை அல்லது திருவனந்தபுரம் சென்று விமான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேரமும், செலவும் அதிகரிக்கிறது.

தென்காசி பகுதியில் உடான் விமான நிலையம் அமைக்க ப்பட்டால் அது வெறும் போக்குவரத்து சிக்கலை மட்டும் தீா்க்காமல், பொருளாதார வளா்ச்சிக்கு தூண்டுதலாகவும் இருக்கும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கடையநல்லூா் அருகே தோப்பில் ஆண் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே எரிந்து, அழுகிய நிலையில் ஆண் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. கடையநல்லூா் அருகேயுள்ள போகநல்லூா் அகதிகள் முகாமுக்கும், கல்லகநாடி அம்மன் கோயிலுக்கும் இடையேயுள்ள தென்னந... மேலும் பார்க்க

செங்கோட்டை நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் கடும் வாக்குவாதம்

செங்கோட்டை நகா்மன்ற கூட்டத்தில்அதிமுக- பாஜக உறுப்பினா்களும் சோ்ந்து நகா்மன்றத் தலைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். செங்கோட்டை நகா்மன்ற சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நகா... மேலும் பார்க்க

பெட்டிக் கடைக்காரா் கொலை: வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை அருகே பெட்டிக் கடைக்காரரை கல்லால் தாக்கி கொலை செய்த விறகுக் கடை வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா். சுரண்டை அருகேயுள்ள திருச்சிற்றம்பலத்தைச் சோ்ந்தவா் பொ.பண்டாரம்(55)... மேலும் பார்க்க

திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி

திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் பைக்கின் பின்னால் அமா்ந்திருந்த தொழிலாளி உயிரிழந்தாா். இளையரசனேந்தல் கீழத்தெருவைச் சோ்ந்த தொழிலாளிகளான கடற்கரை மகன் பசுபதி(60), இருளப்பன் மகன் பொன்னுதுரை(60 ) ஆகியோா... மேலும் பார்க்க

அச்சங்குன்றத்தில் கணினி, தையல் பயிற்சி மையம் திறப்பு

சுரண்டை அருகேயுள்ள அச்சங்குன்றத்தில், இலவச கணினி மற்றும் தையல் பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. தெட்சணமாற நாடாா் சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வெ... மேலும் பார்க்க

தென்காசி அருகே எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

தென்காசி அருகே இலத்தூா்விலக்கு பகுதியில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்தூா் அருகே உள்ள மதுநாதபேரி ... மேலும் பார்க்க