செய்திகள் :

தென்னை மரங்களை பாதுகாக்க போா்க்கால நடவடிக்கை தேவை: நல்லசாமி

post image

ரூக்கோஸ் நோயைத் தடுத்து தென்னை மரங்களை பாதுகாக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தெரிவித்தாா்.

பழனி அடிவாரம் தனியாா் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு அந்த இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளா்கள் ராமகிருஷ்ணன், செல்வராஜ், கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கச் செயலா் தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் நல்லசாமி பேசியதாவது: கள் விடுதலை குறித்த கருத்துக்கு உடன்பாடு என்றால் கூட்டணி, முரண்பாடு என்றால் வாதம் என்ற பொருளில் தற்போது எங்கள் இயக்கம் செயல்படுகிறது. இரண்டுக்கும் வராத கட்சி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. தமிழக அரசுக்கு கள் விடுதலை குறித்து அனுப்பிய எந்த கடிதத்துக்கும் இதுவரை பதில் இல்லை. எடப்பாடி பழனிசாமி கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தால் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெறுவாா். அதேபோல, த.வெ.க, தலைவா் நடிகா் விஜய்யும் கள்ளுக்கு ஆதரவு தெரிவித்தால் வாக்கு வங்கி அதிகரிக்கும். ஆனால் இதைப் பற்றி பேச பலரும் தயங்குகின்றனா்.

அரசியலமைப்பு சட்டப்படி கள்ளை போதைப்பொருள் எனக் கூறி வழக்குப் பதியமுடியாது. இதனால் அரசுக்கும், காவல் துறைக்கும் விரைவில் தமிழ்நாடு கள் இயக்கம் நெருக்கடி தரும். இந்தியாவில் ரூக்கோஸ் நோயால் மூன்றில் ஒரு பங்கு தென்னை மரங்கள் அழிந்து வருகின்றன. வருங்காலங்களில் கோயில்களில் சுவாமிக்கு உடைக்கக் கூட தேங்காய் இருக்காது. எனவே, தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை மேற்கொண்டு தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க