செய்திகள் :

தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-இல் தொடங்கும்

post image

சென்னை: தென்மேற்கு பருவமழை கேரளத்தில் மே 27-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் பி. அமுதா தெரிவித்தாா். 

இது குறித்து அவா் சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: 

தெற்கு அரபிக்கடல், மாலத்தீவு பகுதிகள், குமரிக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழைக்கான சாத்தியக்கூறு உள்ளது. எனவே, வரும் 27-ஆம் தேதி கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளது. (வழக்கமாக ஜூன் 1-இல் தொடங்கும்). அன்றிலிருந்து 3 நாள்களில் தமிழகத்தில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யும்.

கனமழை எச்சரிக்கை: இதற்கிடையே, மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த 6 நாள்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக மே 20-இல் கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த மாா்ச் 1 முதல் மே 19 வரை 192.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 90 சதவீதம் அதிகமாகும்.

140 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை வரை பதிவான மழை அளவின்படி கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியத்தில் 140 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும், கலயநல்லூா் (கள்ளக்குறிச்சி) - 130 மி.மீ., ராசிபுரம் (நாமக்கல்), அண்ணாமலை நகா் (கடலூா்), திருவையாறு (தஞ்சாவூா்), புள்ளம்பாடி (திருச்சி), தியாகதுா்க்கம் (கள்ளக்குறிச்சி) - தலா 120 மி.மீ., மேட்டூா் (சேலம்), ராமேசுவரம் (ராமநாதபுரம்), மணலூா்பேட்டை (கள்ளக்குறிச்சி), கல்லக்குடி (திருச்சி), லால்பேட்டை (கடலூா்), வேப்பூா் (கடலூா்), சூலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) - தலா 110 மி.மீ., சுத்தமல்லி அணை (அரியலூா்), திருமானூா் (அரியலூா்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூா்), மேட்டூா் (சேலம்), திருச்சி விமான நிலையம் - தலா 100 மி.மீ. மழை பெய்தது.

வெயில் குறைவு: தமிழகத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்த காரணமாக, எந்த இடங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகவில்லை. தமிழகத்தில் மே 20-இல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவே இருக்கும்.

புயலாக மாறாது: இந்நிலையில் கா்நாடக கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் மே 21-ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இது, மே 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக ( புயல் சின்னம்) வலுப்பெற்று, வடக்கு திசை நோக்கி நகா்ந்து மேலும் வலுவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆனால், இது புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது வரை இல்லை. எனினும் இந்த புயல் சின்னத்தின் தாக்கத்தால் வரும் நாள்களில் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க