செய்திகள் :

'தேசிய கட்சிகளைத் தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகளால் ஆட்சி செய்ய முடியாது!' - கார்த்தி சிதம்பரம்

post image

தமிழகத்தில் தேசிய கட்சிகளைத் தவிர்த்து விட்டு எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். 

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்தி சிதம்பரத்திடம், ‘தமிழ்நாடு அரசியல் நிலைமை எப்படி இருக்கிறது’ என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.  அதற்கு பதிலளித்த அவர், “இண்டி கூட்டணி ஒற்றுமையாக வலிமையாக இருக்கிறது, இந்த கூட்டணியில் எந்தவிதமானப் பிரச்னையும் இல்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

எதிரணிகளில் இருக்கக்கூடிய கூட்டணியை எடுத்துக் கொண்டால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி, நான் எப்பொழுதுமே அவர்களின் கூட்டணியை குறைத்து மதிப்பிட்டது கிடையாது.

அவர்களுக்கு எல்லா காலகட்டத்திலேயும் நல்ல வாக்கு வங்கி இருந்துள்ளது. இன்னமும்  இருக்கிறது. ஆனால் அந்தக் கட்சி தற்போது பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது.

`புதிய எனர்ஜி இருக்கிறது’

ஆனால் அடிமட்ட தொண்டர்கள் அந்தக் கூட்டணியை விரும்பவில்லை என்பதை நான் கண்கூடப் பார்க்கிறேன். அதனால் அவர்களுக்கு இது பின்னடைவாக கூட இருக்கலாம்.

அதேபோல புதிதாக துவங்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தெரியவில்லை. கூட்டணி வைப்பார்களா? தனித்து போட்டியிடுவார்களா ? என்பது தெரியவில்லை.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் புதிதாக துவங்கப்பட்டிருக்கும் விஜய்யின் கட்சிக்கு ஒரு புதிய எனர்ஜி இருக்கிறது. ஆனால் அந்த எனர்ஜி ஆக்கபூர்வமான அரசியல் கட்சியாக மாறி, தேர்தலை சந்தித்தால் மட்டும் தான் தெரியும்.

பாமக என்ன நிலை எடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை. என்னை பொறுத்தவரை திராவிட முன்னேற்றக் கழகம் தலைமைகளான கூட்டணி வெற்றி பெறும் என்றுதான் நினைக்கிறேன்.

தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல நாடாளுமன்ற தேர்தலும் வரத்தானே செய்கிறது. தேசிய கட்சியோடு இணைந்தால்தான் அந்த திராவிட கட்சிக்கு வாக்கு வங்கி வலுவாக இருக்கிறது. தேசிய கட்சிகளை நிராகரித்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் செய்ய முடியாது" என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதுச்சேரி: கொரோனா தொற்று… மக்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது சுகாதாரத்துறை!

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளித்து தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி சுகாதாரத்துறை... மேலும் பார்க்க

'அது வருத்தம் தான்' - காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கோவையில் கட்சிப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வ... மேலும் பார்க்க

TVK : ``திமுகவை அப்படி சொல்லாதீங்க திருமா அண்ணா" - ஆதவ் அர்ஜூனா காட்டம்

'ஆதவ் அர்ஜூனா பத்திரிகையாளர் சந்திப்பு!'விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா அக்கட்சியின் செயல்பாடுகள் தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார... மேலும் பார்க்க

Shashi Tharoor: 30 ஆண்டுகால ஐ.நா அனுபவம் டு காங்கிரஸ் சீனியர் தலைவர் - சசி தரூரை குறிவைக்கிறதா BJP?

பாஜக-வின் `ஆபரேஷன் சௌத்'தில் இப்போது ஒலித்துக்கொண்டிருக்கும் பெயர் காங்கிரஸின் சசி தரூர்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்... மேலும் பார்க்க

நீட் பயத்தால் மாணவன் தற்கொலை; 'ஒரே ஒரு முறை பெற்றோர்களை சிந்தித்துப் பாருங்கள்' - எடப்பாடி பழனிசாமி

சேலம், சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டியில் மாணவர் ஒருவர் நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்தும், திமுகவிற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி... மேலும் பார்க்க

'நாடகங்களை விடுத்து 'நீட்' தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்' - தமிழக அரசுக்கு இராமதாஸ் கண்டனம்

`நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க