செய்திகள் :

அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்கும்: ஐஎம்டி

post image

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த 4,5 நாள்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்குப் பருவமழை கேரளத்தை மையமாகக் கொண்டு ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும். இந்த ஆண்டு சற்று முன்னதாகவே பருவமழைக் காலம் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 4, 5 நாள்களுக்குள் மழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் மே 27ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே கணித்திருந்தது.

எதிர்பார்த்தபடி கேரளத்தில் பருவமழை வந்தால், 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி தொடங்கியது போலவே இந்தாண்டும் இருக்கும். என்று ஐஎம்டி தரவுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த 4-5 நாள்களில் கேரளத்தில் பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த பருவமழையானது ஜூன் 1 ஆம் தேதி கேரளத்தில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதிக்குள் பல மாநிலங்களில் பருவமழை பொழியும். இது செப்டம்பர் 17ல் வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்கி அக்டோபர் 15ல் முழுமையாக விலகும்.

கடந்தாண்டு மே 30ஆம் தேதியும், 2023ல் ஜூன் 8, 2022ல் மே 29, 2021 ஜூன் 3, 2020 ஜூன் 1, 2019 ஜூன் 8, 2018 மே 29 ஆகிய தேதிகளில் தென் மாநிலத்தில் பருவமழை தொடங்கியது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை 27ஆம் தேதிக்குள்ளும், அதன் பிறகு ஒரு சில நாள்களில் தமிழகத்தில் தொடர்ந்து பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலார்ட்’! 5 பேர் பலி

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையினால் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இன்று (மே 20) பெய்து வரும் கனமழையினால், 7 கடலோர மாவட்டங்கள் மற... மேலும் பார்க்க

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம் ஆயுஷ்மான் பாரத்: பிரதமர் மோடி

உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீடு திட்டம், இந்தியாவின் ஆயுஷ்மான் பாரத் என்றும் இதில் 58 கோடி மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெற்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நிலநடுக்கம்...!

வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பதிவாகியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.வங்கக் கடல் பகுதியில், கடலுக்கடியில் இன்று (மே 20) மாலை 3.15 மணியளவில், 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகி... மேலும் பார்க்க

மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை: கணவர் வெறிச்செயல்!

கர்நாடகத்தின் பெலகவி மாவட்டத்தில் குழந்தை இல்லாததால் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதானி தாலுகாவில் உள்ள மலபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் காமண்ணா கொனகா... மேலும் பார்க்க

ராஜஸ்தானின் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மக்கள் வெளியேற்றம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானின் சிகார், பாலி, பில்வாரா மற்றும் தௌஸா ஆகிய மாவட்டங்களின் ஆட்சிய... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: மதரஸா கல்வியில் ’ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடம் சேர்ப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தின் மதரஸா பாடத்திட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த பாடங்கள் சேர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு, பதிலடியாக இந்திய ராணுவம் மேற... மேலும் பார்க்க