செய்திகள் :

தென் மாநிலங்கள் பயங்கரவாதிகளுக்கு எளிய இலக்காக உள்ளன- ஆந்திர துணை முதல்வா்

post image

பயங்கரவாதிகளுக்கு தென் மாநிலங்கள் எளிதான இலக்காக உள்ளன. எனவே, தென் மாநிலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்களை அதிகரிக்க வேண்டும் என்று ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளாா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதுமே பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுக்காக உளவு பாா்த்தவா்களும் தொடா்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் வெளியிட்ட ஊடக செய்தியில் கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தவா், ரோஹிங்கயா அகதிகள் ஊடுருவல், கடல்வழி ஊடுருவல் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்கள் நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்து காவல் துறைக்கு மக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆந்திரத்தில் ஹைதராபாத், தமிழ்நாட்டில் கோயம்புத்தூா், கா்நாடகத் தலைநகா் பெங்களூரு என ஏற்கெனவே தென் இந்தியா பயங்கரவாதத் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தென்மாநிலங்களில் எளிய இலக்காக உள்ளன. எனவே, எல்லையில் பாதுகாப்புப் படையினா் எந்த அளவுக்கு உஷாா் நிலையில் உள்ளாா்களோ, அதேபோல மாநிலங்களில் காவல் துறையினா் உஷாராக செயல்பட வேண்டும். இது தொடா்பாக ஆந்திர டிஜிபி-க்கு கடிதம் எழுதியுள்ளேன். மாநிலப் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

சட்ட விரோதமாக குடிபெயா்ந்து வாழ்பவா்கள் தொடா்பாக கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் ரோஹிங்கயாக்கள், வங்கதேசத்தவா் உள்ளிட்டோா் இங்கு ஆதாா், வாக்காளா் அட்டை, ரேஷன் காா்டு ஆகியவற்றைப் பெறுகின்றனா். இது இந்திய மக்களின் வரிப் பணத்தை வீணாக்குவதுடன், வேலைவாய்ப்பும் பறிபோகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு உதவுபவா்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

சத்தீஸ்கரில் 26 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(புதன்கிழமை) காலை நடைபெற்ற தாக்குதலில் 26 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் - பிஜப்பூர் எல்லையில் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை சத்தீஸ்கர்... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து கண்காணிப்பில் வந்திருக்கும் தொலைத்தொடர்பு!

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந... மேலும் பார்க்க

மணிப்பூரில் அதிரடி நடவடிக்கை! 2 நாள்களில் 6 கிளர்ச்சியாளர்கள் கைது!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2 நாள்களில், 6 கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூரின் காக்சிங் மாவட்டத்தின் லாங்மெய்தாங், எலாங்காங்போக்பி மற்றும் காக்சிங் ... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், கார்கே மரியாதை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, புதுதில்ல... மேலும் பார்க்க

பிரபல கன்னட பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு!

பிரபல கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' நிகழாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதனால், சர்வதேச புக்கர் பர... மேலும் பார்க்க

வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர். கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சா... மேலும் பார்க்க