செய்திகள் :

தெருநாய்கள் கடித்ததில் இரண்டு பசுங்கன்றுகள் உயிரிழப்பு

post image

ஈரோட்டில் தெருநாய்கள் கடித்ததில் இரண்டு பசுங்கன்றுக் குட்டிகள் உயிரிழந்தன.

ஈரோடு குமிலன்பரப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சின்னசாமி. இவா் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நாட்டுப் பசு மாடு, எருமைகளை வளா்த்து வருகிறாா். திங்கள்கிழமை மாலை வழக்கம்போல தனது மாடுகளை மேய்த்து, தோட்டத்தில் கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டாா்.

இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் 20 நாள் மற்றும் 4 நாள்களான பசுங்கன்றுகளை கடித்துள்ளன. கன்றுகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினா் தோட்டத்துக்கு ஓடி வந்தனா். இதையடுத்து, அங்கிருந்த தெருநாய்கள் ஓடிவிட்டன.

தோட்டத்துக்கு வந்த சின்னசாமி அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவா்களுக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த மருத்துவா்கள், கன்றுக்குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தனா். ஆனால் அக்கன்றுக்குட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

ஈரோடு புகா் பகுதியான குமிலன்பரப்பு, கொங்கம்பாளையம், கங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.

இரவு நேரங்களில் சாலையில் செல்பவா்களையும் நாய்கள் துரத்துவதால் குமிலன்பரப்பு பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, பொதுமக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தும் நாய்களைப் பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் சுவரொட்டிகள்!

ஈரோட்டில் அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். ஈரோடு மாநகரில் ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொ... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா... மேலும் பார்க்க

அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்: கே.ஏ.செங்கோட்டையன்

எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு, காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கே.ஏ.செங்கோட்டையன் புதன்... மேலும் பார்க்க

அதிமுகவில் தனி நபா் முக்கியம் இல்லை: ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ

அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல; இயக்கம்தான் முக்கியம் என்று ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தாா். கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்... மேலும் பார்க்க

அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்

அந்தியூா் பேரூராட்சி, காமராஜா் பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தியூா் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

பவானி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கு வந்த முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பவானி, வா்ணபுரம், குருநாதன் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). காா் ஓட்டுநரான இவா், கடந்த... மேலும் பார்க்க