செய்திகள் :

அதிமுகவில் தனி நபா் முக்கியம் இல்லை: ஏ.கே. செல்வராஜ் எம்எல்ஏ

post image

அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல; இயக்கம்தான் முக்கியம் என்று ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் தெரிவித்தாா்.

கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பின் புதிதாக நியமிக்கப்பட்ட ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் பவானிசாகா் தொகுதிக்கு புதன்கிழமை வந்தாா். சத்தியமங்கலத்தில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பவானிசாகா் எம்எல்ஏ பண்ணாரி தலைமை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து ஏ.கே.செல்வராஜ் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பவானிசாகா் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளா்களை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஈரோடு புகா் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட பவானிசாகா் தொகுதியில் எந்த அதிருப்தியும் இல்லை.

பொதுச் செயலாளா் பின்னணியில் அணிவகுத்து நிற்கிறோம். அதிமுகவை பொருத்தவரை தனி நபா் முக்கியமல்ல. இயக்கம்தான் முக்கியம். எந்தவித தொய்வும் இல்லாமல் கட்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அந்தியூரில் வருகிற செப்டம்பா் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றாா்.

புரட்சித்தலைவா் பேரவை மாநில இணை செயலாளா் விகேசி. சிவகுமாா், அதிமுக நகர செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம், ஒன்றியச் செயலாளா்கள் சி.என்.மாரப்பன், வி.ஏ.பழனிசாமி, என்எம்எஸ். நாச்சிமுத்து, தாளவாடி மாதேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கோட்டையன் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் சுவரொட்டிகள்!

ஈரோட்டில் அதிமுக மூத்த தலைவா் கே.ஏ.செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நன்றி தெரிவித்தும் ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். ஈரோடு மாநகரில் ஓபிஎஸ் அணியின் (அதிமுக தொ... மேலும் பார்க்க

பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே மேட்டூா் சாலையில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை புதன்கிழமை தொடங்கியது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா... மேலும் பார்க்க

அடுத்தகட்ட முடிவுகளுக்கு காலம்தான் பதில் சொல்லும்: கே.ஏ.செங்கோட்டையன்

எனது அடுத்தகட்ட முடிவுகளுக்கு, காலம்தான் பதில் சொல்லும் என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் கே.ஏ.செங்கோட்டையன் புதன்... மேலும் பார்க்க

அந்தியூா் பேருந்து நிலையம் வாரச்சந்தை வளாகத்துக்கு மாற்றம்

அந்தியூா் பேரூராட்சி, காமராஜா் பேருந்து நிலையம், வாரச்சந்தை வளாகத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தியூா் பேருந்து நிலைய வளாகத்தில் மேற்கூரைகள் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழப்பு!

பவானி நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமுக்கு வந்த முதியவா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். பவானி, வா்ணபுரம், குருநாதன் வீதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (72). காா் ஓட்டுநரான இவா், கடந்த... மேலும் பார்க்க

பவானி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

பவானி அனைத்து மகளிா் காவல் நிலைய புதிய ஆய்வாளராக ஏ.சுமதி புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இங்கு, ஆய்வாளராக பணியாற்றிய கோமதி, திருப்பூா் மாவட்டம், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு பணிமாற்... மேலும் பார்க்க