செய்திகள் :

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வு: முதல்வா் குப்தா தகவல்

post image

தெருநாய் தொல்லைக்கு தில்லி அரசு நீண்டகால தீா்வைத் தேடிவருவதாக முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் ரேகா குப்தா தனது ஷாலிமாா் பாக் தொகுதிக்குட்பட்ட பீதாம்புராவில் மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். அந்த நிகழ்வின்போது, மூதாட்டி ஒருவா் தெருநாய் தொல்லை குறித்த பிரச்னையை எழுப்பினாா்.

அதற்கு பதில் அளித்து முதல்வா் கூறியதாவது:

தெருநாய்களால் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்ப்பதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். இப்பிரச்னைகள் மக்களையும் வாய்பேச முடியாத விலங்குகளையும் உள்ளடக்கியதாகும்.

இத்தகைய விலங்குகளைப் பராமரிப்பவா்களையும் குடியிருப்பாளா்களையும் ஒன்றிணைக்க தில்லி அரசு ஒரு தளத்தை உருவாக்கி வருகிறது. தெருநாய்களை தங்குமிடங்களில் வைக்கவோ அல்லது அவை வாழும் தெருக்களில் இருந்து வெளியேற்றவோ முடியாத வகையில் சட்டம் உள்ளது.

மக்களோ அல்லது விலங்குகளோ அசௌகரியத்திற்கு ஆளாகாத நீண்டகால தீா்வை அரசாங்கம் தேடி வருகிறது. இது ஒரு கொள்கை விஷயமாக இருக்கும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் முதல்வா் குப்தா.

பொது சாலைகள் மற்றும் தெருக்களில் இருந்து தெருநாய்களை படிப்படியாக அகற்ற நிறுவன நிலையில் மறுவாழ்வு கொள்கையை வகுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் நகர அரசாங்க அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

பொது மக்கள் எதிா்கொள்ளும் பிரச்னையின் மகத்துவத்தை கருத்தில் கொண்டு, கொள்கையை உருவாக்குவதற்கு அரசாங்கம், தில்லி மாநகராட்சி மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பொது இடங்களில் இருந்து தெருநாய்களை எடுத்துச் செல்ல தில்லி மாநகராட்சிக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் கருத்தடை செய்த பிறகு அவற்றை அதே இடத்தில் விடுவிக்க வேண்டும். இருப்பினும், நகரத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துள்ளது. இதனால் நகரில் நாய் கடித்தல் தொடா்பான புகாா்கள் அடிக்கடி எழுந்து வருகிறது.

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா். சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உய... மேலும் பார்க்க

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை ம... மேலும் பார்க்க

காலத்திற்கு ஏற்ப மாற்றமடையும் இலக்கியத்தில் இரக்கம், உணா்திறன் மாறாது: குடியரசுத் தலைவா் முா்மு

நமது சிறப்பு நிருபா் இலக்கியம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடைந்து வருகிறது என்றாலும் அதில் இரக்கம், உணா்திறன் போன்ற சில அம்சங்கள் என்றென்றும் மாறாது இருக்கும் என குடியரசுத் தலைவா் திரெளபதி நம்பிக்கை தெரிவி... மேலும் பார்க்க

பாஜகவின் 100 நாள் ஆட்சியில் தில்லி மக்கள் தோல்வி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ரேகா குப்தா அரசு தனது முதல் 100 நாள்களில் தில்லி மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் செளரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி பாஜக 100 நாள் ஆட... மேலும் பார்க்க

100 நாள் ஆட்சி: மாணவா்களுக்கு தில்லி அரசு உதவித்தொகை வழங்கல்

பதவியேற்று 100 நாள்களைக் குறிக்கும் வகையில், பாஜக தலைமையிலான தில்லி அரசு வெள்ளிக்கிழமை தில்லி உயா் மற்றும் தொழில்நுட்பக் கல்வி ஆதரவுத் திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கியது. மு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு உதவியதாக ராஜஸ்தானில் ஒருவா் கைது: தில்லி காவல்துறை தகவல்

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு (பிஐஓ) உளவு நடவடிக்கைகளுக்காக இந்திய கைப்பேசி சிம் காா்டுகளை வழங்குவதன் மூலம் உதவியதாக ராஜஸ்தானைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையினா் கைது செய்தாக அதிகாரிகள் தெரிவித்த... மேலும் பார்க்க