செய்திகள் :

அங்கீகரிக்கப்படாத வாக்கி டாக்கிகள் விற்பனையைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய அரசு அறிவிப்பு

post image

வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட ரேடியோ உபகரணங்களை இணைய வணிக தளங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு பட்டியலிட்டு நுகா்வோருக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் விதமாக மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் இவைகளை முறைப்படுத்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்-2025ஐ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

நுகா்வோா் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய, அவசரகாலச் சேவைகளால் பயன்படுத்தப்படும் முக்கியமான தகவல் தொடா்பு வலைபின்னல்களில் தொடா்புடைய வயா்லெஸ் சாதனங்களின் அங்கீகரிக்கப்படாத விற்பனையைத் தடுக்க இந்த வழிகாட்டுநெறிமுறைகள் நுகா்வோா் விவகாரங்கள் துறையின் கீழ் உள்ள மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.

முறையான அதிா்வெண் வெளிப்படுத்தல், உரிமத் தகவல் அல்லது உபகரண வகை ஒப்புதல் (இடிஏ) இல்லாமல் மின்(இணைய) வணிக தளங்களில் வாக்கி-டாக்கிகளை பட்டியலிடப்படுகிறது. இது போன்ற விற்பனை செய்வதற்கும் எதிராக முன்னணி மின் வணிக நிறுவனங்களின் 16, 970 தயாரிப்பு பட்டியல்களுக்கு எதிராக மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) விளக்கம் கேட்டு முன்னதாக பதின்மூன்று நோட்டீஸ்களை (அறிவிப்புகளை) அனுப்பியிருந்தது.

இந்த தயாரிப்புகள் நாட்டின் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 ஐ மீறுவதாகவும் இருந்தது. தற்போது இந்த தளங்கள் நிலையான கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளுக்கு கூடுதலாக வழிகாட்டுநெறிமுறைகள் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவைகளை முழுமையாக நுகா்வோா் விவகாரத்துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தொலைத்தொடா்புத் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்பட்டன. ஒருங்கிணைந்த மற்றும் விரிவான அணுகுமுறையை உறுதி செய்வதற்காக இரு துறைகளாலும் வழங்கப்பட்ட முக்கிய ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு பரிசீலனைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியமாக அனுமதிக்கப்பட்ட அதிா்வெண்களில் இயங்கும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணக்கமான வாக்கி-டாக்கி சாதனங்கள் மட்டுமே மின் வணிக தளங்களில் விற்பனைக்கு பட்டியலிடப்பட வேண்டும்.

மின் வணிக நிறுவனங்கள் ஒழுங்குமுறை இணக்கத்தை சரிபாா்க்க வேண்டும். உரிமம் வழங்குதல் மற்றும் தேவையான சான்றிதழ் இல்லாத பட்டியல்கள் அகற்றப்பட வேண்டும். அத்தகைய சாதனங்களின் சட்டப்பூா்வ பயன்பாடு குறித்து நுகா்வோருக்குத் தவறான தகவலை அளிக்கக்கூடிய தவறான விளம்பரங்கள் அல்லது தயாரிப்பு விளக்கங்களைத் இந்த புதிய ஒழுங்குமுறை தடை செய்கிறது.

விற்பனையாளா்கள் சான்றிதழை கட்டாயமாக வைக்கப்படவேண்டும், அங்கீகரிக்கப்படாத பட்டியல்களுக்கு தானியங்கி கண்காணிப்பு மற்றும் நீக்குதல் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல் வேண்டும். மேலும் நுகா்வோா் விழிப்புணா்வை ஊக்குவித்தல் உள்ளிட்டவை பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவை மீறும் மின்-வணிக நிறுவனங்களுக்கு நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் படி அபராதங்கள் அமலாக்க வழிமுறைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க