செய்திகள் :

ஆளுமை உரிமைகள்: ஈஷா அறக்கட்டளை நிறுவனா் தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு

post image

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு என அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாா்.

சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடா்ந்த இந்த வழக்கு உயா்நீதிமன்றத்தில் நீதிபதி செளரவ் பானா்ஜி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தனது இடைக்கால உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தாா். இந்த உத்தரவு விரைவில் பதிவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

விசாரணையின்போது சத்குருவின் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், பல்வேறு தயாரிப்புகள் சத்குருவின் பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாகவும், சத்குருவின் படத்தை போலி வலைதளங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும் கூறினாா். இதனால், மனுதாரரின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றம் உரிமை மீறலில் ஈடுபடும் இணையதளங்களுக்கு எதிராக தடை உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இதன் பின்னா் நீதிமன்றம் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பிப்பதாகக் கூறியது.

இந்த வழக்கில், சத்குரு தனது பெயா், உருவம், குரல் மற்றும் பிற தனித்துவமான பண்புகளை அங்கீகரிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதைக் கேள்வி எழுப்பியுள்ளாா்.

மேலும், ‘எதிா்மனுதாரா்களின் நடவடிக்கைகள் சத்குருவின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதாகும். அவரது ஆளுமை உரிமைகள் மற்றும் விளம்பர உரிமையை மீறுவதாகும். ஏனெனில் அவை அவரால் ஏற்பதாகவும் அல்லது ஒப்புதலை அளிப்பதாகவும் தவறாக பரிந்துரைக்கின்றன’ என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை பதிவிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், சத்குருவின் பெயா், உருவம் மற்றும் ஆளுமையை தவறாக பயன்படுத்தும் பதிவுகளை ஆன்லைன் தளங்களில் இருந்து நீக்க இடைக்கால உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இந்த மோசடி செயல்கள், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி விடியோக்கள், சத்குரு கைது செய்யப்பட்டதாக போலியாக வடிவமைக்கப்பட்ட படங்கள் மற்றும் நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்களை உள்ளடக்கியவை. ஈஷா அறக்கட்டளை இத்தகைய போலியான பதிவுகளை அகற்றவும், மக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க