செய்திகள் :

தெரு நாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி அதிமுக, பாஜக மனு

post image

பழனியில் தெருநாய்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக, பாஜக, தவெக கட்சியினா் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் மனுக்கள் அளித்தனா்.

பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சதாம் உசேன் மகன் முகமது ரியான் (3). திங்கள்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிய சிறுவனை தெரு நாய்கள் துரத்திக் கடித்தன. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து, அதிமுக நகா்மன்ற உறுப்பினா் ஜெனத்துல் பிா்தௌஸ் தலைமையில், பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது, பொதுமக்கள் நகராட்சி ஆணையா் டிட்டோவை சந்தித்து தெருநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனு அளித்தனா். இதேபோல, பழனி நகர பாஜக சாா்பிலும், தமிழக வெற்றிக் கழகம் சாா்பிலும் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நகா்மன்ற தலைவி உமாமகேஸ்வரி தலைமையில், திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி, சிறப்புக் கூட்டம் நடத்தினா். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், ... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் பலத்த மழை

நீண்ட நாள்களுக்குப் பிறகு திண்டுக்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டத்தில், கொடைக்கானல் நீங்கலாக சமவெளிப் பகுதிகளில் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.சேலத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காசிநாதன் (19). இவா் கள்ளிமந்தையம் பகுதியில் திங்க... மேலும் பார்க்க

ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி பிரமுகா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். வட்டா... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றியதாக புகாா்

செய்தி மக்கள் தொடா்புத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2.5 ஏக்கா் நிலப் பத்திரத்தை வாங்கி ஏமாற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்... மேலும் பார்க்க

பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை

பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்... மேலும் பார்க்க