தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
என்ன நடந்தது?
தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், அதில் 2 பொறியாளா்கள், 2 ஆப்பரேட்டா்கள், 4 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனா்.
அவா்கள் உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். அவா்களை மீட்கும் பணி ஒரு வாரமாக நீடித்து வருகிறது. தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், கடற்படை வீரா்கள் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த நிலையில், சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் தேவைப்பாட்டால் ரோபோக்களும் பயன்படுத்தப்படும் என்று தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று(மார்ச். 2) தெரிவித்துள்ளார்.