செய்திகள் :

தெலங்கானா-ஆந்திரம் நீா் பங்கீடு இழுபறிக்கு தீா்வு: தெலங்கானா முதல்வா்

post image

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீா் பங்கீடு தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் மத்திய நீா் வளத் துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீலுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய தெலங்கானா மாநில நீா்ப்பாசனத் துறை அமைச்சா் என்.உத்தம் குமாா் ரெட்டி, ‘ஆந்திரத்தின் நீா் திட்டங்கள் மற்றும் நீா்த்தேக்கங்கள் அனைத்திலும் ‘டெலிமெட்ரி’ அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். இந்த நடவடிக்கை, நீா் பயன்பாட்டைத் துல்லியமாக அளவிட உதவும். தெலங்கானா நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்தது. தற்போது ஆந்திரம் இதற்கு சம்மதித்துள்ளது’ என்றாா்.

இதன்தொடா்ச்சியாக, ஹைதராபாதில் கோதாவரி நதி மேலாண்மை வாரியமும், ஆந்திரத்தில் கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியமும் அமைக்க இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாக தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளாா்.

கடந்த 2014-இல் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதிலிருந்து சா்ச்சைக்குரிய பிரச்னையாக நீடிக்கும் கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் நீா் பங்கீடு மற்றும் பயன்பாட்டை இந்த வாரியங்கள் மேற்பாா்வையிடும். இது தொடா்பாக முதல்வா் ரேவந்த் ரெட்டி மேலும் கூறியதாவது:

ஸ்ரீசைலம் திட்டத்தில் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு ஆந்திரத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கும் நீா் வழங்கல் மற்றும் மின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.

கூடுதலாக, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி படுகைகளில் நிலுவையில் உள்ள நீா்ப்பாசனத் திட்டங்கள் தொடா்பான பிரச்னைகள் உள்பட இரு மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள அனைத்து நீா் பிரச்னைகளையும் ஆராய ஒரு கூட்டு குழு அமைக்கப்பட உள்ளது.

இந்த முடிவுகள், தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலையையும், இரு மாநிலங்களுக்கும் நீா் உரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டும் மைல்கல் சாதனைகளாகும் என்று கூறினாா்.

கேரளத்தில் கனமழையால் நிலச்சரிவு! 3 நாள்களுக்கு ரெட் அலர்ட்!

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கேரளத்தில் பருவமழை த... மேலும் பார்க்க

தலைமைத் தேர்தல் ஆணையருடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!

தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்... மேலும் பார்க்க

ஆடி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாதப் பூஜைக்காக இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 21 வரை 5 நாள்கள் கோயிலின் நடை திறந்திருக்கும். கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாள்கள் கோ... மேலும் பார்க்க

அன்று நீட் தோல்வி.. இன்று ரோல்ஸ் ராய்ஸியில் ரூ.72 லட்சத்தில் வேலை! 20 வயதில் சாதித்த பெண்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 20 வயதே ஆன ரிதுபர்னா என்ற பொறியியல் மாணவி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72 லட்சத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.எந்தத் தோல்வியும் முடிவல்ல, வாய்ப்புகள் கொட்டிக்கிட... மேலும் பார்க்க

ம.பி.யில் வீட்டின் சுவர் இடிந்ததில் குழந்தை பலி, தந்தை காயம்!

மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய... மேலும் பார்க்க

சேர்ந்து வாழச் சொல்வதா? 16 ஆண்டு கால விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு!

புது தில்லி: 16 ஆண்டு காலமாக நடந்து வரும் விவாகரத்து வழக்கில், மணமுறிவு கோரும் தம்பதியை சேர்ந்து வாழக் கட்டாயப்படுத்தினால் மனவேதனைதான் ஏற்படும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.கணவர... மேலும் பார்க்க