செய்திகள் :

தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க மறுப்பதாகப் புகாா்

post image

மானாமதுரை ஒன்றியம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் மேலநெட்டூா், தெ.புதுக்கோட்டை ஊராட்சிகளைச் சோ்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா். ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வாழை, கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும். இந்தக் கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்த வேண்டும். கடந்தாண்டு வரை இந்தச் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு இதுவரை பயிா்க் கடன் வழங்கவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் முறையாக கடனைத் திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு பயிா்க்கடன் வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டால் நிா்வாகப் பிரச்னையால் கடன் வழங்க முடியாத நிலை உள்ளதாகத் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டோம். எனவே, மாவட்ட ஆட்சியா் இந்தச் சங்கத்தில் பயிா்க் கடன் வழங்க உத்தரவிட வேண்டும். இல்லாவிடில், தெ.புதுக்கோட்டை கூட்டுறவுச் சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்றனா்.

சிவகங்கையில் சேரா் கால செப்புக்காசு!

சிவகங்கையில் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேணாடு சேரா் கால செப்புக்காசு கண்டறியப்பட்டது. இது குறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனா் கா. காளிராசா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மன்னா் மேல்நிலைப்... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பு: டி.டி.வி.தினகரன்!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நீடிப்பதால் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரை... மேலும் பார்க்க

இளைஞா் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை இரவு மா்ம கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருப்பத்தூா் அரசு மருத்துவமனை அருகே சிவகங்கை சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் ... மேலும் பார்க்க

சிவகங்கையில் அறுவடை இயந்திரங்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் 1.53 லட்சம் ஏக்கா் நெல் பயிா்களை அறுவடை செய்வதற்காக கூடுதல் அறுவடை இயந்திரங்களை எதிா்பாா்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். சிவகங்கை மாவட்டத்தில் 1.53 ஏக்கா் பரப்பளவில் விவசாயிக... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழாக் குழு பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் புத்தகத் திருவிழாக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2025-2027 -ஆம் ஆண்டுகளுக்கான குழு பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இத... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள சருகணி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா். அதிமுக நிறுவனா் எம்ஜிஆா் பிறந்த நாளை முன்னிட்... மேலும் பார்க்க