செய்திகள் :

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறது திமுக அரசு: அண்ணாமலை

post image

தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக விளம்பர நாடகமாடிக் கொண்டிருந்து விட்டு, ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேசியக் கல்விக் கொள்கை 2020 வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன.

அவற்றின் முக்கியத்துவத்தை இப்போதுதான் திமுக அரசு உணர்ந்திருக்கிறது.

கல்விக் கொள்கை வடிவமைப்பில், திமுக அரசு ஐந்து ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்பதை இனியாவது முதல்வர் மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். உங்கள் அரசியலுக்காக தமிழகப் பள்ளி மாணவர்கள் கல்வியில் விளையாடுவதை, இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்துக்கான மாநிலக் கல்விக் கொள்கை தனித்துவமானது! முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்துக்கான மாநில அரசின் கல்விக் கொள்கை (பள்ளிக் கல்வி) அறிக்கையை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், புதிய கல்விக் கொள்கை முறையில், தமிழ் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும்.

இனி, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

Former BJP leader Annamalai has said that the DMK government has only now realized the importance of the National Education Policy.

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை: எல்.முருகன்

தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையில் புதியவை ஏதும் இல்லை என்றும், ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதையே புதியக் கல்விக் கொள்கையாக அறிவித்திருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எ... மேலும் பார்க்க

பிகாரைப் போல தமிழகத்திலும் வாக்காளா்களை சோ்ப்பாா்கள்: ஜோதிமணி பேட்டி

விழிப்புணா்வுடன் இல்லையென்றால் பீகாா் போல, தமிழ்நாடு தோ்தலிலும் கூடுதல் வாக்காளா்களை தோ்தல் ஆணையம் மூலம் சோ்க்கப்படுவாா்கள் என்று கரூா் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் ஜோதிமணி வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க

இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்... மேலும் பார்க்க

நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு குழு அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்

சென்னை நந்தனம் அரசுக் கலைக் கல்லூரியில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வு குழுவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வெ... மேலும் பார்க்க

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கு: காா்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏா்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மனுவுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது. கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ... மேலும் பார்க்க

ஓமந்தூராா் மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு மேம்பாடு: அரசாணை வெளியீடு

சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆா்த்ரோஸ்கோபி (நுண் துளை எலும்பு சிகிச்சை) துறையை ரூ.7.77 கோடியில் மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீட்டு அனுமதி அளிக்கப்பட்ட... மேலும் பார்க்க