செய்திகள் :

தேசிய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி

post image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி, கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

பெரியகுளத்தில் பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தகுதிச் சுற்றுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், புதுதில்லி இந்திய தரைப்படை, சென்னை தமிழக காவல் துறை, புதுதில்லி விமானப்படை உள்பட 22 அணிகள் கலந்து கொண்டன.

திங்கள்கிழமை நடைபெற்ற முதல் நாள் லீக் போட்டியில் லோனாவாலா இந்திய கடற்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 78 - க்கு 57 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இதேபோல, புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை வருமானவரித் துறை அணி 79 -க்கு 79 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாள் லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் புதுதில்லி விமானப்படை அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 84 -க்கு 63 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் வருமானவரித் துறை அணியை லோனாவாலா இந்திய கடற்படை அணி 78-க்கு 76 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. புதன்கிழமை (மே 21) மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க