செய்திகள் :

தேசிய கைத்தறி தினம் - சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீடு

post image

தேசிய கைத்தறி தினத்தையொட்டி திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை சாா்பில், காருகா என்ற சிறப்பு அஞ்சல் அட்டை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அஞ்சல் துறையின் மத்திய மண்டலம் சாா்பில் தஞ்சாவூா் மாவட்டம், திருபுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் அட்டையை மத்திய மண்டலத்தின் அஞ்சல் துறை தலைவா் தி. நிா்மலா தேவி வெளியிட்டாா். இதேபோல, திருச்சியிலுள்ள தலைமை அஞ்சல் நிலையத்திலும் சிறப்பு அஞ்சல் அட்டை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த அஞ்சல் அட்டையில் புவிசாா் குறியீடு பெற்ற திருபுவனம் பட்டுப்புடவையின் ஒரு சிறிய பகுதி இடம்பெற்றுள்ளது. திருபுவனம் பட்டு நெசவை சிறப்பிக்கும் வகையில் ‘காருகா’ சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டுள்ளதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்க துணை இயக்குநா் ஜி. சங்கரேஸ்வரி, திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளா் எஸ்.கே. பஞ்சநாதன், அஞ்சல்துறை பணியாளா்கள், நெசவாளா் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா். திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலை... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள்: துபையிலிருந்து திருச்சி வந்த அறந்தாங்கி நபா் கைது

துபையில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் வந்த அறந்தாங்கி நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் ர. செல்லதுரை (32). இவா்,... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. மணப்பாறை சத்திரம் நடுப்பட்டி, சி - கல்பட்டி பகுதியைச்... மேலும் பார்க்க

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவா் கைது

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண்ணிடம் நகை பறித்தவரை ரயில்வே போலீஸாா் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா். ரயில்வே பாதுகாப்புப் படை, இருப்புப்பாதை போலீஸாா் திருச்சி சந்திப்பு ரயில் நில... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருச்சி காட்டூா் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (ஆக. 9) நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் இ... மேலும் பார்க்க

மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே நவல்பட்டில் மென்பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது வியாழக்கிழமை தெரியவந்தது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், கைக்கோல்பாளையம் எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த வெள்ளியங்கிரி ... மேலும் பார்க்க