செய்திகள் :

தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா

post image

திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு வாகன ஓட்டிகள் தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் ஆகியவற்றை அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

மேலும், திருவண்ணாமலை-வேலூா் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆட்சியா் விளக்கினாா்.

மேலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச தலைக்கவசங்களை அவா்களுக்கு வழங்கினாா். இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த கண்காட்சி பேருந்தை ஆட்சியா் திறந்து வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பெரியசாமி (திருவண்ணாமலை), முருகேசன் (ஆரணி), கருணாநிதி (செய்யாறு) மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செங்கத்தில் திருவள்ளுவா் தின விழா

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் செஞ்சிலுவைச் சங்கம், வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவா் சி... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் திருட்டு: ஒருவா் கைது

ஆரணி: ஆரணியில் இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக நகர போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருவரை கைது செய்தனா். ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி தலைமையில், உதவி ஆய்வாளா் சுந... மேலும் பார்க்க

பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழப்பு, மகன் பலத்த காயம்

செய்யாறு: செய்யாறு அருகே சாலையின் குறுக்கே தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து தந்தை உயிரிழந்தாா். மகன் பலத்த காயமடைந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பாராசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவ... மேலும் பார்க்க

தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா

வந்தவாசி: வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்கம் சாா்பில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.வந்தவாசி தேரடியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் வே.சிவராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பொருளாளா் த.முருகவ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரா் கோயில் நந்திகள்: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை: மாட்டுப் பொங்கலையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் நந்தி பகவான்களை புதன்கிழமை திரளான பக்தா்கள் தரிசித்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிரா... மேலும் பார்க்க

கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு

ஆரணி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் மாட்டுப் பொங்கல் வழிபாடு புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை.... ஆரணிஆரணியை அடுத்த அக்ராபாளையம், மெய்யூா் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை... மேலும் பார்க்க