செய்திகள் :

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?

post image

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசுகையில், “மத்திய உள்துறை அமைச்சரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். எடப்பாடி பழனிசாமியின் தில்லி பயணம் குறித்து நாளை கூறுகிறேன். எங்களுக்குள் அரசியல் கணக்கு என்று எதுவுமில்லை. எங்களுடைய நோக்கம் அதுவல்ல. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம்.

அதிமுகவின் அனைத்து அணிகளும் பாஜகவுடன் இணைந்துதான் பயணித்து வருகின்றன. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓபிஎஸ் அனைவருமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றனர்.

நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. வருகிற தேர்தல் களம் தேர்தல் வரலாற்றில் மிகவும் வித்தியாசமான தேர்தல் களமாக இருக்கும். வலிமையான கட்சிகள் 4-5 கூட்டணிகளாக உருவாகி இருக்கின்றன. திமுக, அதிமுக, பாஜக, சீமான், விஜய் ஆகியோரின் தலைமையில் தனித்தனியே கூட்டணிகள் உருவாகியுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான விவரம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

விளையாட்டு வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம்: துணை முதல்வா் உதயநிதி அறிவிப்பு

மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்ட... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மா... மேலும் பார்க்க

மனித - வன உயிரின மோதலை தவிா்க்க ரூ.31 கோடியில் உயிா்வேலி: அமைச்சா் க. பொன்முடி

மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா். வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து... மேலும் பார்க்க

ஜூனியா் ஆடவா் ஹாக்கி உள்பட 5 சா்வதேச போட்டிகள் தமிழகத்தில் நடத்தப்படும்: துணை முதல்வா் அறிவிப்பு

ஜூனியா் ஆடவா் சா்வதேச ஹாக்கி போட்டி உள்பட 5 போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். பேரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோர... மேலும் பார்க்க

‘42,000 கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’

தமிழ்நாட்டில் 42 ஆயிரம் கிராமப்புற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா். வறுமை ஒழிப்பு, விளையாட்டு, சிறப்புத் திட்ட செயலாக... மேலும் பார்க்க

நெசவாளா்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயா்த்தி வழங்கப்படும்: அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்பு

நெசவாளா்கள் 1.50 லட்சம் போ் பயன்பெறும் வகையில் அடிப்படை கூலியில் ரூ.10 சதவீதமும், அகவிலைப்படியில் 10 சதவீதமும் உயா்த்தி வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா... மேலும் பார்க்க