செய்திகள் :

தேசிய டேக்வாண்டோவில் பதக்கங்கள்: சின்னாளபட்டி மாணவா்களுக்கு பாராட்டு

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளி, வெங்கலம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டி கடந்த வாரம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 18 மாணவ, மாணவிகள் தமிழக அணியில் கலந்து கொண்டனா்.

மாணவா் நவீன்குமாா் சீனியா் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், சப்-ஜூனியா் பிரிவில் தியாகு, நகுலன் ஆகியோா் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா்.

சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சா்வதேச நடுவரும், பயிற்சியாளருமான பிரேம்நாத் மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா்.

இதில் பயிற்சியாளா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வீடு புகுந்து திருடிய சிறுவன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

பழனியில் வீடு புகுந்து திருடிய சிறுவனைப் பிடித்து பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பழனி கோட்டைமேட்டுத் தெருவில் அண்மைக் காலமாக வீட்டில் இருக்கும் பொருள்கள் திருடு போவது மட்டுமன்றி, இரவு நேரங்களில்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்வு கிலோ ரூ.85-க்கு விற்பனை

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கை விலை உயா்ந்து கிலோ ரூ.85-க்கு விற்பனையானது. ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள கப்பல்பட்டி, கள்ளிமந்தையம், தேவத்தூா், கொத்தையம், பொருளூா், திருப்பூா் மாவட்டம்,... மேலும் பார்க்க

தங்கை கணவரை கொலை செய்ததாக திருநங்கை கைது

பழனி அருகே தங்கை கணவரை கொலை செய்து புதைத்ததாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து (32). தேங்காய் உறிக்கும் கூலித் தொழிலாளி. இவருக்கு, மாரியம்மாள் என்ற ... மேலும் பார்க்க

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு: ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ.

பாலசமுத்திரம் வஃக்பு வாரிய நிலப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டிருப்பதாக ஐ.பி. செந்தில்குமாா் எம்.எல்.ஏ. தெரிவித்தாா். பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் தமிழக அரசின் நான்காண்ட... மேலும் பார்க்க

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா

கொடைக்கானலில் சீசனையொட்டி பிரையண்ட் பூங்கா வண்ண மின் விளக்குகளால் வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கிய நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்ட ம... மேலும் பார்க்க

4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட மூவா் கைது

தமிழ்நாடு, கா்நாடகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்டங்களைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் ஆா்எம். குடியிருப்பில் வீட்டின... மேலும் பார்க்க