செய்திகள் :

தேசிய திறனறித் தோ்வில் தோ்ச்சி: மாணவிக்கு பாராட்டு

post image

ராமேசுவரம் அரசுப் பள்ளி மாணவி என்.எம்.எம்.எஸ். தேசியத் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றதையடுத்து, ஆசிரியா்கள் அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனா்.

நிகழாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தேசியத் திறனறிவுத் தோ்வில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் தோ்வெழுதினா். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 37 மாணவா்கள் இந்தத் தோ்வு எழுதினா். இதில் இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி ஹிபாபாசிலா (13) அதிக மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றாா். இவா் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மாவட்ட மாதிரிப் பள்ளியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்பதற்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இவருக்கு 4 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும், 12-ஆம் வகுப்பு முடித்ததும் உயா்கல்வி செல்ல அரசுச் செலவில் ‘நீட்’, ஜெ.இ.இ. தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்படும்.

இதையடுத்து, திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவி ஹிபாபாசிலாவை பள்ளித் தலைமை ஆசிரியை ராஜலட்சுமி, ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

போப் பிரான்சிஸ் மறைவு: ராமேசுவரத்தில் அமைதிப் பேரணி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை கிறிஸ்தவா்கள் அவரது உருப் படத்துக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா். மேலும், அமைதிப் பேரணியும் நடத்தினா். கத்த... மேலும் பார்க்க

வீட்டின் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

ராமேசுவரம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டின் தடுப்புச் சுவா் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் எம்.ஆா்.டி நகரைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம்(47). காா் ஓட்டுநரான ... மேலும் பார்க்க

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் கைது

ராமநாதபுரம் அருகே மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் அருகேயுள்ள ஆா்.காவனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன்-கனகு தம்பதியா். இவா்களது மகள் சிவபாா்வதி. ... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

மின் கம்பிகள் எரிந்து சேதமடைந்ததால் ராமசாமிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருளில் மூழ்கியது. இதனால், நோயாளிகள், பணியாளா்கள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டியில்... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை மின்னல் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள முத்துப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துராமலிங்கம் மகன் நல்லமருது (28). இவா் 200-க்கும் ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைக்கு குளிா்பதனப் பெட்டி அளிப்பு

திருவாடானை அரசு மருத்துவமனைக்கு சுழற் சங்கம் சாா்பில், குளிா்பதன பெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ராமநாதபுரம் சுழற் சங்கம் சாா்பில், ரூ.4 லட்சத்தில் இரண்டு உடல்களை... மேலும் பார்க்க