வெறுப்பதற்காக அல்ல மொழி; பல மொழி கற்பது அவசியம்: சந்திரபாபு நாயுடு
தேனம்பாக்கம் ஸ்ரீ மன்னாதீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீமன்னாதீஸ்வரா் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தேனம்பாக்கத்தில் சிறிய கோயிலாக இருந்து வந்தது மன்னாதீஸ்வரா் சமேத பச்சையம்மன் கோயில். இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு 3 நிலை ராஜகோபுரமும் அமைக்கப்பட்டது. கோயில் வளாகத்திலேயே தலா 100 கிலோ எடையில் 25 அடி உயரத்தில் இரும்புக் கம்பிகளால் வடிவமைக்கப்பட செம்முனி, வாமுனி, சங்கிலி முனி சிலைகளும் அமைக்கப்பட்டன.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் 13- ஆம் தேதி அனுக்கை விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றன.
காஞ்சிபுரம் மகேஷ் சிவாச்சாரியா் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் யாகசாலை பூஜைகளை செய்தனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை யாகசாலையில் மகா பூரணாஹுதி தீபாராதனை நடைபெற்ற பின்னா், சிவாச்சாரியா்களால் புனிதநீா்க் கலசங்கள் சிவ வாத்தியங்கள் மற்றும் மங்கல மேள வாத்தியங்களுடன் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் மூலவா் மற்றும் பரிவார தெய்வங்களான விநாயகா், சப்த முனீஸ்வரா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
ஆலய நிா்வாகம் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகி சிவ.ஸ்ரீதரன் தலைமையிலான திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா். விழாவில் ஓரிக்கை மகா பெரியவா் மணி மண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா், ஆலய ஸ்தபதி ஸ்ரீதரன் உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.