செய்திகள் :

தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?

post image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனு எழுதி கொடுத்துவரும் நாகேந்திரபாண்டியனை அணுகியுள்ளார்.

அவர் தனக்கு அதிகாரிகளை தெரியும் மனுவை கொடுத்து விரைவாக வேலையை முடிக்கலாம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயலட்சுமி அவரிடம் மனுவை கொடுத்து அனுப்பியுள்ளார். உள்ளே சென்றுவிட்டு சிறிதுநேரத்தில் வந்த நாகேந்திரபாண்டியன், அதிகாரிகளிடம் பேசிவிட்டதாகவும், மறுநாள் வரச்சொல்லி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கைதான நாகேந்திரபாண்டியன்

அதேபோல மறுநாள் ஜெயலட்சுமிக்கு போன் செய்து தேனி புது பஸ் ஸ்டாண்ட் வரச்சொல்லியுள்ளார். அங்குள்ள ஒரு ஹோட்டலில் ஜெயலட்சுமியை அமரவைத்துவிட்டு, உங்கள் டூவிலரை கொடுங்கள் அதிகாரிகளை பார்த்துவிட்டு வருகிறேன் எனக் கூறியிருக்கிறார். காலதாமதம் ஆனதை தொடர்ந்து ஜெயலட்சுமி போன் செய்து பார்த்துள்ளார் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயலட்சுமி வீட்டில் தகவல் சொல்லிவிட்டு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீஸார், மதுரை காந்திநகர் ஆசாரித் தோப்பைச் சேர்ந்த நாகேந்திரபாண்டியனை கைது செய்தனர். ஏமாற்றி வாங்கிச் சென்ற டூவிலரை மதுரையில் உள்ள ஒரு கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்திருந்தார். அந்த டூவிலரை மீட்டனர். நாகேந்திரபாண்டியன் இதுபோல வேறு நபர்களிடம் கைவரிசை காட்டியுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்து... மேலும் பார்க்க

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித... மேலும் பார்க்க

பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..

செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது. பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள... மேலும் பார்க்க

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்

வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேச... மேலும் பார்க்க

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அ... மேலும் பார்க்க