`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
தேமுதிகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பது தொடா்பாக, தமிழக அரசைக் கண்டித்து திருக்கோவிலூரில் தேமுதிகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான எல்.வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 77 கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாத காலமாக விவசாயிகள் கடன் கேட்டால் பணம் இல்லை என்றும், மத்திய அரசிடம் பணம் கேட்டுள்ளதாகவும் வந்தவுடன் தருவதாக அலைக்கழித்து வருகின்றனராம். எனவே, தமிழக அரசு உடனடியாக கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சித் தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.