செய்திகள் :

`தேர்தலில் போட்டியிட வாங்கிய ரூ.20 லட்சம் கடனுக்காக..' - பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம்

post image

மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டத்தில் உள்ள கரோட் என்ற கிராமத்தில் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் லட்சுமி பாய். இவர் கடந்த 2022-ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் போட்டியிட லட்சுமி பாயிடம் பணம் இல்லை. இதையடுத்து தனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.20 லட்சத்தை கடனாக வாங்கி தேர்தலில் செலவு செய்து வெற்றியும் பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆகிவிட்டார்.

ஆனால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் தேர்தலுக்காக வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர் தொடர்ந்து கடனை திரும்ப கொடுக்கும்படி கேட்டு நிர்ப்பந்தம் செய்து வந்தார்.

பஞ்சாயத்து அலுவலகம்

லட்சுமி பாய் கடனை திரும்பக் கொடுக்க பல இடங்களில் புதிய கடன் கேட்டுப்பார்த்தார். ஆனால் எங்கும் கடன் கிடைக்கவில்லை. இதையடுத்து ரன்வீர் சிங் என்பவரை சந்தித்து கடன் கேட்டார்.

அவர், தான் ரூ.20 லட்சம் கடனை அடைத்துவிடுவதாகவும், அதேசமயம் பஞ்சாயத்தை தனக்கு குத்தகைக்கு விடவேண்டும் என்றும், பஞ்சாயத்து வேலைகளை தான் செய்து கொள்வதாகவும் கூறினார். இது லட்சுமி பாயிக்கு பிடித்துப்போனது.

இதையடுத்து லட்சுமி ராயும், ரன்வீர் சிங்கும் 100 ரூபாய் முத்திரை தாளில் பஞ்சாயத்தை குத்தகைக்கு விட ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதில் 20 லட்சம் கடனை ரன்வீர் செலுத்தவேண்டும் என்றும், பஞ்சாயத்து வேலைகளை செய்யும்போது அதில் 5 சதவீதத்தை கமிஷனாக கொடுக்கவேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது.

இந்த குத்தகை ஒப்பந்தம் குறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

வேலைக்கு 5% கமிஷன் (சித்தரிப்பு படம்)

உடனே மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்த ஆரம்பித்தது. லட்சுமி பாயும், ரன்வீரும் செய்து கொண்ட ஒப்பந்த நகல் மாவட்ட நிர்வாகத்திற்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் லட்சுமி பாய் பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதோடு இது தொடர்பாக போலீஸிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு பஞ்சாயத்து தலைவர் புதிதாக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து லட்சுமி பாய் கணவர் சங்கர் கூறுகையில், ''நாங்கள் யாரிடமும் கடன் வாங்கவில்லை. அப்படி இருந்தும் லட்சுமி பாய் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தயவு செய்து எங்களை தொந்தரவு செய்யாதீர்கள்''என்று தெரிவித்தார்.

``பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்பு தலைவர் பதவியை ஏலம் விடுவது குறித்து கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் பஞ்சாயத்தையே குத்தகைக்கு விடுவது புதிதாக இருக்கிறது.'' என்று நெடிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா: 3 நாள்களாக இடி, புயலுடன் கனமழை; 24 பேர் உயிரிழப்பு

பருவமழை வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் தான் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மே மாதமே மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 3 நாள்களாக இடி, புயலுடன் கூடிய கனமழை பெ... மேலும் பார்க்க

`கரப்பான் பூச்சி செல்லப்பிராணியா?'- தலையில் இருந்த பூச்சியை அகற்றிய பெண்; கொந்தளித்த சுற்றுலா பயணி!

சுற்றுலா பயணி ஒருவரின் தலையில் இருந்த கரப்பான் பூச்சியை அகற்றி உதவ முயன்ற பெண்ணிடம் அந்த சுற்றுலா பயணி ஆக்ரோஷப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தாய்லாந்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்ப... மேலும் பார்க்க

சென்னை: வண்ணக் கோலம் கொள்ளும் வள்ளுவர் கோட்டம்! புனரமைப்புப் பணிகள் தீவிரம் | Photo Album

கருணாநிதி 100: `பராசக்தி’ வசனம் முதல் வள்ளுவர் புகழ் வரை... கருணாநிதியும் தமிழும்!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppbவணக்கம்,BI... மேலும் பார்க்க

"என்னை இடமாற்றம் செய்தவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார்" - வேதனையைக் கொட்டிய ஹைகோர்ட் நீதிபதி

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்க... மேலும் பார்க்க

Booker Prize: சர்வதேச புக்கர் பரிசை வென்று சாதனை படைத்த கன்னட எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

எழுத்தாளர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவர் பானு முஷ்டாக். இவர் எழுதிய 'ஹசீன் அண்ட் அதர் ஸ்டோரிஸ்' என்ற புத்தகத்தின் மொழிப்பெயர்ப்பு பதிப்பான 'ஹார்ட் லேம்ப்' என்ற சிறுகதை தொகுப்புகள... மேலும் பார்க்க

Hindi: "இந்தியாவில் இந்தியில்தான் பேசுவேன்" - வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மறுத்த வங்கி அதிகாரி

வங்கிகளில் பணியாற்றும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியில் பேசும்போது வாடிக்கையாளர்கள் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிரா வங்கிகளில் இந்தியில் பேசிய வங்கி அதிகாரியை நவநிர்மாண் சேனா... மேலும் பார்க்க