செய்திகள் :

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்: பிரசாந்த் கிஷோர்

post image

தேர்தலுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஜன்சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிகாரில் ஜன்சுராஜ் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பேசுகையில்,

``நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். அதனை லாலு பிரசாத்திடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

அவரது மகன் 9 ஆம் வகுப்புகூட தேர்ச்சி பெறவில்லை. ஆனால், பிகாரின் அரசராக்க லாலு பிரசாத் விரும்புகிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக படித்துள்ளார்கள். ஆனாலும், பியூன் வேலைகூட கிடைக்கவில்லை.

தேர்தலின்போது, உங்களுக்கு தலைவர்கள் பணம் கொடுத்தால், மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் ரேஷன் அட்டை, நிலப் பதிவைப் பெற உங்களிடம் லஞ்சம் பெறப்பட்டதா? இல்லையா? உங்களிடமிருந்து கொள்ளையடித்ததை, இப்போது ரூ. 1,500, 2,000-ஆக கொடுக்கின்றனர். அது உங்கள் பணம்.

ஆனால், உங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள். தலைவர்களுக்கு நாற்காலி கிடைக்கும்போது, மக்களுக்காக அவர்கள் அதனைப் பயன்படுத்துவதில்லை.

நீங்கள் எனக்கு வாக்களித்தால், நான் உங்களை ஏமாற்ற மாட்டேன் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அதனால்தான், நான் வாக்கு கேட்பதில்லை. இருப்பினும், உங்களை வறுமையிலிருந்து மீட்கும் ஒரு தீர்வை நான் வழங்குவேன். அவ்வாறு இல்லையென்றால், நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

தாதே சாகேப் பால்கே விருது! மோகன்லாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட நடிகர் மோகன்லாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,``திறமை மற்றும் நடிப்பில் பன்முகத் தன்மையின் ஓர் அடையாள... மேலும் பார்க்க

எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய குடும்பங்களுக்கு பாதிப்பு: வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்காவில் எச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வெளியுறவு அமைச்சகம் எதிர்வினையாற்றியுள்ளது.இது குறித்து, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்க எச்-1பி ... மேலும் பார்க்க

திரிம்பகேஷ்வரில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

திரிம்பகேஷ்வரில் 3 பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், திரிம்பகேஷ்வரில் கும்பமேளா தொடர்பான துறவிகளின் கூட்டத்தை செய்தி சேகரிப்பதற்காக ச... மேலும் பார்க்க

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

லக்னௌவில் ஷாப்பிங் மாலில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், சுஷாந்த் கோல்ஃப் சிட்டி காவல் நிலையப் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் செப்டம்ப... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்னை மரம் விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலி

கேரளத்தில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததில் 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர். கேரள மாநிலம், நெய்யாட்டின்கராவில் உள்ள குன்னத்துகலில் தென்னை மரம் வேரோடு பெயர்ந்து இரண்டு பெண் தொழிலாளர்கள் மீது சனி... மேலும் பார்க்க

அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்வு?

எச்-1பி விசாவுக்கு இனிமேல் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்கா செல்வதற்கான விமான கட்டணம் அதிரடியாக உயர்ந்திருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர... மேலும் பார்க்க