செய்திகள் :

தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி!

post image

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வலிமையாக குரல் எழுப்பி வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(ஆக. 12) அதிர்ச்சியை கிளப்பும் சம்பவம் அரங்கேறியது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்கு விசாரணையில், சமூக ஆர்வலரான யோகேந்திர யாதவ் திடீரென இரு வாக்காளர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினார். அவர்கள் இருவரும் யாரெனில், தேர்தல் ஆணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்துவிட்ட நபர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள்.

இதனைத்தொடர்ந்து, கீழ்கண்ட தகவலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு முன் யோகேந்திர யாதவ் எடுத்துரைத்தார்.

அப்போது அவர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், "ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இன்னும் இருக்கிறார்கள். அதை நீங்களே இப்போது நேரில் பார்க்கலாம். அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி இன்னும் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை” என்றார்.

இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து வாதிட்ட மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, இப்படி நீதிமன்ற விசாரணையில் திடீரென இருவர் நேரில் முன்னிலைப்படுத்தப்படுவதை எதிர்த்தார்.

”அவர்கள் இருவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய முறையில் விண்ணப்பித்திருக்கலாமே. வெறும் விளம்பரத்துக்காக யாதவ் அவர்களை இங்கே வரச் செய்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து, நீதிபதி பக்சி குறிப்பிடுகையில், “நிர்வாகச் செயல்பாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடும். அதை சரிசெய்துகொள்ள முடியும்” என்றார்.

இதனிடையே, பிகார் வரைவு வாக்காளர் பட்டியல் விவகார விசாரணையில் மூத்த வழக்குரைஞரும் எம்.பி.யுமான கபில் சிபலின் நீதிமன்ற வாதத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்ய காந்த், “தேர்தல் ஆணையத்துடன் நீங்கள் ஒத்துப்போக வேண்டும். இப்போது வெளியிடப்பட்டிருப்பது வரைவு வாக்காளர் பட்டியல்தான். அதில் சில தவறுகள் இருக்கலாம். இறந்தவர்கள் இன்னும் இருப்பதாகவும், உயிருடன் இருப்பவர்கள் மறைந்துவிட்டதாகவும் காண்பிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை திருத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இது இறுதிப்பட்டியல் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

இதனிடையே, மனுதாரர்கள் தரப்பிலிருந்து வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி சேர்க்கப்படாதவர்களைப் பற்றி தனியாக ஒரு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தேர்தல் ஆணையம் தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

high drama towards the end of the marathon Supreme Court hearing on Bihar Special Intensive Revision of electoral rolls as  two persons who were declared dead in the draft roll published by the Election Commission of India surfaced in the courtroom.

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மக்களவை தேர்தலின் போது வ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத் தி... மேலும் பார்க்க

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வ... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து!

மல்யுத்த வீரர் சாகர் ரானா கொலை வழக்கில் சக மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துள்ளது.கடந்த 2021 ஆம் ஆண்டு தில்லி சத்ரசால் திடலில் ஏற்பட்ட மோதலில் மல்யுத்த வீரர்... மேலும் பார்க்க