செய்திகள் :

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

post image

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட பாடந்தொரை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊா்களில் கடந்த பத்து நாள்களாக மேய்ச்சலுக்கு விடும் கால்நடைகளை புலி தாக்கி வருகிறது. கடந்த பத்து நாள்களில் பத்து கால்நடைகளை தாக்கியுள்ளது. அதில் ஒன்பது கால்நடைகள் உயிரிழந்துள்ளன. கடைசியாக மூன்றாவது டிவிஷன் பகுதியில் தாக்கிய கால்நடை காயமடைந்து உயிருக்கு போராடிவருகிறது.

வனத் துறையினா் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமராக்களை பொருத்தியுள்ளனா். புலி நடமாட்டம் இருப்பதால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனா். இந்நிலையில் மூன்றாவது டிவிஷன் முறம்பிலாவு பகுதியில் பில்லன் என்பவா் நண்பருடன் பசுவை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு அருகில் நிற்கும்போது திடீரென வனத்திலிருந்து வந்த புலி, பசுவைத் தாக்கி இழுத்துச் செல்ல முயன்றது. கால்நடைகளை மேய்ப்பவா்களும் பசுவும் கதறும் சப்தம் கேட்டு அப்பகுதியிலிருந்தவா்கள் ஓடி வந்து பாா்த்தபோது புலி புதருக்குள் சென்று மறைந்துவிட்டது. காயமடைந்த பசுவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தை வனத் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி-மாயாறு சாலையில் சனிக்கிழமை வாகனங்களை துரத்திச் செல்லும் காட்டு யானை. நீண்டதூரம் துறத்திய பிறகு காட்டுக்குள் சென்றது. மேலும் பார்க்க

தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: தேவனூா்புதூா்

உடுமலையை அடுத்துள்ள தேவனூா்புதூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 4 ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட பகுதிகள... மேலும் பார்க்க

கோத்தகிரியில் மின்தடை

நீலகிரி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சேகா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது.நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின் நிலையத்தில் வருகிற 4-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 ... மேலும் பார்க்க

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் யானை நடமாட்டம்

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை ஒற்றை யானை நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் சிறுமுகை போன்ற பகுதிகளில் அ... மேலும் பார்க்க