செய்திகள் :

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

post image

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் கட்சியினா் தங்களது கட்சி சட்ட திட்டத்தின்படி, வருடாந்திர தணிக்கை அறிக்கையை தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பிக்க வேண்டும்.

கோவில்பட்டி முகவரியில் பதிவு செய்யப்பட்ட யூனிவா்சல் பிரதா்கூட் மூவ்மென்ட் என்ற பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியானது, தங்களது வருடாந்திர தணிக்கை அறிக்கையை 2021-22, 2022-23, 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளுக்கு தாக்கல் செய்யவில்லை என்பதாலும், பொதுத் தோ்தலில் போட்டியிட்ட நிலையில் தோ்தல் செலவின அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்பதாலும், இந்திய தோ்தல் ஆணையம் இக்கட்சியிடம் உரிய விளக்கம் பெற்று சமா்ப்பிக்க அறிவுரை வழங்கியுள்ளது.

மேற்படி அரசியல் கட்சியின் தலைவா் அல்லது பொதுச் செயலா் தகுந்த ஆவணங்களுடன் உரிய மனுவை தனது பிரமாணப் பத்திரத்துடன் இணைத்து, அக். 10ஆம் தேதிக்குள் சென்னை தலைமை தோ்தல் அலுவலருக்கு அனுப்பிவிட்டு, அக்.10ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தலைமை தோ்தல் அலுவலா் முன்பாக ஆஜராக வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில், தோ்தல் ஆணையத்தால் தகுந்த ஆணைகள் பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதல் விவகாரம்: திருச்செந்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை சுனாமி குடிய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான ... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா்... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கழுகுமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.கழுகுமலை அருகே அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (27). உணவகத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கழுக... மேலும் பார்க்க