செய்திகள் :

தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

post image

பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற அவிநாசி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற இவ்விழாவுக்கு திமுக நகரச் செயலாளா் திராவிடன் வசந்தகுமாா் தலைமை வகித்தாா். மேயரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான தினேஷ்குமாா், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள், 100 சதவீதம் தோ்ச்சி பெற துணைபுரிந்த ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முத்துக்குமரன் வரவேற்றாா்.

இதில் திமுக திருப்பூா் மாநகர பொறுப்பாளா் தங்கராஜ், பொதுக்குழு உறுப்பினா் சரவணன்நம்பி, மாமன்ற உறுப்பினா் ராதாகிருஷ்ணன், நகராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, ஒன்றியச் செயலாளா் சிவபிரகாஷ், நகர திமுக அவைத் தலைவா் ராயப்பா உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமையாசிரியா் புனிதவதி நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளி ஆய்வகத்துக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் இரண்டு குளிா்சாதன கருவிகள் வழங்கப்பட்டன.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க