செய்திகள் :

``தையல் போட்டால் தழும்பு வரும்'' -காயத்தில் Fevi kwik போட்டு ஒட்டிய செவிலியர்... கர்நாடக அதிர்ச்சி!

post image

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரம்ப சுகாதார மையம். இந்த மருத்துவமனைக்கு கடந்த ஜனவரி 14-ம் தேதி கன்னத்தில் ஆழமான காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட குருகிஷன் அன்னப்ப ஹோசாமணி என்ற 7 வயது சிறுவனை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது பணியில் இருந்த செவிலியர் ஜோதி, தையலிட்டு, மருந்திட வேண்டிய காயத்துக்கு உடைந்தப் பொருள்களை ஒட்டவைக்கப் பயன்படுத்தப்படும் Fevi kwik-க்கைத் தடவியிருக்கிறார். அப்போதே சிறுவனின் பெற்றோர் அதை வீடியோவாகப் பதிவு செய்திருக்கின்றனர்.

காவல்துறை

அந்த வீடியோவில் பேசும் செவிலியர் ஜோதி, ``குழந்தையின் முகத்தில் தையல் போட்டால் தழும்பு ஏற்படும். அதனால்தான் fevi kwik -னை பயன்படுத்தினேன். நான் இவ்வாறு பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர், அந்த வீடியோவை ஆதாரமாக வைத்து, காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மாநில அரசு அந்த செவிலியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும் அந்த செவிலியர் ஹாவேரி தாலுகாவில் உள்ள குத்தல் சுகாதார நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாகப் சுகாதார மற்றும் குடும்ப நல சேவைகள் ஆணையர் அலுவலகத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, ``fevi kwik என்பது ஒருவகையான பிசின். விதிமுறைகளின் படி இதனை மருத்துவம் சார்ந்தவைக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால் பணியில் இருந்த செவிலியர் தனது கடமையை தவறி fevi kwik -னை பயன்படுத்தியதால் அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் .மேலும் இச்சம்பவம் குறித்த சில விசாரணை நிலுவையில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' - வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறைய... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: ``10-ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும்" -நடிகர் சோனு சூட்க்கு எதிராக கைது வாரண்ட்!

பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா. இவர் லுதியானா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ``மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி... மேலும் பார்க்க

``வயித்துல குழந்தை இருக்கு, விட்டுடு தம்பினு கெஞ்சினேன்’’ - நெஞ்சை உறைய செய்த கர்ப்பிணி வாக்குமூலம்

வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறத... மேலும் பார்க்க

மணப்பாறை: சிறுமிக்குப் பாலியல் தொல்லை; பள்ளி தாளாளர், கணவர் உள்பட 4 பேர் கைது; என்ன நடந்தது?

திருச்சி மாவட்டம், மணப்பாறையிலுள்ள தனியார்ப் பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் சுதா. இவரது கணவர் வசந்தகுமார்.நேற்று (பிப்ரவரி 6) பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியின் போது நான்காம் வகுப்பு படித்து வரு... மேலும் பார்க்க

`காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..!’ - வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகிலுள்ள கரடிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மூத்த மகன் வசந்த். ஐடிஐ படித்து வந்த நிலையில், கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலி... மேலும் பார்க்க

பேச மறுத்த காதலி - இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் உருவாக்கி அவதூறு பரப்பிய கோவை இளைஞர்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் விமல்குமார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. நாளடைவில் விமல்குமாரின் நடவடிக... மேலும் பார்க்க