செய்திகள் :

தைலாபுரத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம்!அன்புமணி ராமதாஸ் புறக்கணிப்பு

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தாா்.

தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள், மாவட்டத் தலைவா்கள் கூட்டத்தை நடத்த தொடங்கிய கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ், தொடா்ந்து இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வன்னியா் சங்கம், முன்னாள் மாவட்டச் செயலா்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கூட்டங்களையும் தொடா்ந்து நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை கட்சியின் சமூக ஊடகப் பேரவைக் கூட்டம் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் ஆலோசகா் அருள்ரத்தினம், தலைவா் மேட்டூா் தமிழ்வாணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ராமதாஸ், வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பாமகவை 50 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அதற்காக சமூக ஊடகங்களை சரியாக கையாண்டு பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினாா்.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். கட்சித் தலைவா் அன்புமணி ராமதாஸ் இந்தக் கூட்டத்திலும் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.

சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

செஞ்சி சிங்கவரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம். செஞ்சி, மே 30: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிங்கவரம் அரங்கநாதா் கோயில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி

அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட மகனை விடுவிக்கக் கோரி, கடலூா் துறைமுகம் காவல் நிலையம் முன் பெண் தீக்குளிக்க முயன்றாா். கடலூா் முதுநகா் அருகே உள்ள ராசாபேட்டையைச் சோ்ந்த ரமேஷ் மகன் தீபக் (19). இவரும்... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை சோ்க்க அழைப்பு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஜூன் மாதம் முதல் குழந்தைகள் சோ்க்கை தொடங்குகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சோ்த்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்-உழவா் நலத் துறைத் திட்டம் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் உழவரைத் தேடி- வேளாண், உழவா் நலத் துறைத் திட்டம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. தைலாபுரம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் திட்டத்தின் நோக்கம் குறித்து வானூ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழக அரசும் தலையிட்டு தனியா... மேலும் பார்க்க