செய்திகள் :

தொடர்ந்து 14-வது ஆண்டாகக் குறையும் ஜப்பானின் மக்கள் தொகை!

post image

ஜப்பான் நாட்டின் மக்கள் தொகையானது தொடர்ந்து 14வது ஆண்டாகக் குறைந்துள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகையானது கடந்த 2024-ம் ஆண்டின் அக்டோபர் மாத கணக்குப்படி 12 கோடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 2023-ம் ஆண்டிலிருந்து 8,98,000 அளவுக்கு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அந்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும், குழந்தைப் பிறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தும் வருகின்றது.

இந்நிலையில், ஜப்பானில் வாழும் வெளிநாட்டினர் உள்ளிட்ட மொத்த மக்கள் தொகையானது 5,50,000 எண்ணிக்கைகள் சரிந்து 12.3 கோடியாகக் குறைந்துள்ளது. இது தொடர்ந்து 14வது ஆண்டாக சரிவைக் குறிப்பதாக ஜப்பானின் உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகையில், தற்போது அந்நாட்டில் வாழும் 14 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3,43,000 சரிந்து 1.3 கோடியாகக் குறைந்துள்ளதாகவும்; அதேவேளையில், அந்நாட்டில் வாழும் மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கையானது 3.6 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்நாட்டில் உழைக்கும் மக்களின் எண்ணிக்கையானது (15 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள்) 7.3 கோடியாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, ஜப்பானில் தனி நபரது ஆயுள்காலமானது கடந்த 2000-ம் ஆண்டில் 81.5 (81.5 - 81.6) ஆகக் கணக்கிடப்பட்டிருந்த நிலையில் அது 2021-ல் 84.5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மாலத்தீவில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை!

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சியில் பிரதிநிதித்துவம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகளை பேரவையில் அறிமுகம் செய்வதில் வா... மேலும் பார்க்க

பெண் தற்கொலை சம்பவம்: உதவி ஆய்வாளர்கள், பெண் தலைமைக் காவலர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே அண்ணன் கைது செய்யப்பட்டதால், காவல் நிலையம் முன் விஷம் குடித்த தங்கை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடுக்காவேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் 2 பேர், பெண் தலைமைக் காவலர் பணியிட மா... மேலும் பார்க்க

சத்தீஸ்கர் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் கொண்டகான்-நாராயண்பூர் எல்லை அருகே நடந்த என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பஸ்தர் காவல் துறை தலைவா் பி.சுந்தர்ராஜ் கூறுகையில், கொண்டகான்-நார... மேலும் பார்க்க

மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(ஏப்.16) அதிரடியாக சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.70,520-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு நாள்களாக சிறிதளவில் குறைந்து வந்த தங்கத்தின்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.4 ஆகப் பதிவு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்ட ... மேலும் பார்க்க

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவு

திபெத்: சீனாவில் தொலைதூர இமயமலைப் பகுதியான திபெத்தில் புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.முன்னதாக, திபெத்தின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ. ஆழ... மேலும் பார்க்க