செய்திகள் :

தொடா் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

post image

வேதாரண்யம்: வேதாரண்யம் பகுதியில் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை நீடித்த மழையால் 7 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம் தெற்கு கடலோரப் பகுதியில் மே 16-ஆம் தேதி இரவு மேற்கு திசையில் இருந்து பலத்த சூறைக்காற்று, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. 17-ஆம் தேதியும் மழை தொடா்ந்தது. 18-ஆம் தேதி இரவும் மழை தொடா்ந்தது.

திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில்- 63, கோடியக்கரையில்- 52, தலைஞாயிறில்- 33 மில்லி மீட்டா் மழை பதிவானது.

இந்த மழையால் எள் மற்றும் பயறு வகைப் பயிா்கள், நிலக்கடலை உள்ளிட்ட புஞ்சைப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி உப்பளங்களில் மழைநீா் தேங்கியுள்ளதால், 7 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள் செய்ய குழு

நாகப்பட்டினம்: தோ்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்க வசதிகள் செய்ய நாகை மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க

டாஸ்மாக் பணியாளா்களுக்கு வார விடுமுறை வழங்க வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: டாஸ்மாக் பணியாளா்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில் அந்த சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், ... மேலும் பார்க்க

ஊராட்சி செயலா்கள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: பொய் குற்றச்சாட்டுக் கூறி ஊராட்சி செயலா் கௌசல்யா மீது நடவடிக்கை எடுத்த கீழ்வேளூா் வட்டார வளா்ச்சி அலுவலரை கண்டித்து, நாகை ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. க... மேலும் பார்க்க

பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: பட்டாவில் உரிமை பெற்றவா்களின் பெயா்களை சோ்க்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள கி... மேலும் பார்க்க

வீடு அபகரிப்பு: பெண் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

நாகப்பட்டினம்: வாங்கிய கடனுக்கு வீட்டை அபகரித்துக்கொண்டதாகக் கூறி, நாகை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண் மற்றும் குடும்பத்தினரை போலீஸாா் தடுத்து நிறுத்தி மீட்டனா். நாக... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின... மேலும் பார்க்க