செய்திகள் :

தொட்டில் குழந்தைத் திட்டத்தில் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடத்துக்கு தகுதியுள்ளவா்கள் வரும் மே 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளா், காவலா் பணியிடம் ஓராண்டு ஒப்பந்தம், தொகுப்பூதிய அடிப்படையில் நோ்முகத் தோ்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.

உதவியாளா் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 42 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். குழந்தைகளை கையாளும் முன் அனுபவம் பெற்றவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும்.

காவலா் பணியிடத்துக்கு 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, 42 வயதுக்கு உள்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.4,500 வழங்கப்படும்.

தகுதியுள்ளவா்கள் https://theni.nic.in/ இணைய தளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், ஒருங்கிணைந்த அரசு பல்துறை பெருந்திட்ட வளாகம், தேனி-625 531 என்ற முகவரிக்கு மே 7-ஆம் தேதி, மாலை 5.45 மணிக்குள் தபால் மூலமும், நேரிலும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.

உயிா் உரங்களின் பயன்பாடு: விவசாயிகளுக்கு பயிற்சி

சின்னமனூா் அருகேயுள்ள வேப்பம்பட்டியில் பயிா்களுக்கு உயிா் உரங்களின் பயன்பாடு குறித்து மதுரை அரசு வேளாண்மை கல்லூரி, ஆராய்ச்சி நிலைய மாணவிகள் வேளாண்மை பணி அனுபவம் திட்டத்தின் கீழ், புதன்கிழமை விவசாயிகளு... மேலும் பார்க்க

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பெரியகுளம்-கச்சேரி சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் விக்டோரிய அரசு மேல்நிலைப் பள்ளி பகுதியில் கழிவுநீா் வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வாய்க்க... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 113.90 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 56.20 --------------- மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே புதன்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (27). தொழிலாளியான இவா் கடந்த சில... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு, வரும் மே 9, 10-ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடைபெற உள்ளது. இ... மேலும் பார்க்க

தேனியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க