செய்திகள் :

‘தொலைத்தொடா்புத் துறையில் மேம்பாடு: 125 ஆய்வுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம்’

post image

அடுத்த தலைமுறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை ஊக்குவிக்க மத்திய அரசு உருவாக்கிய தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி உதவியால் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய தொலைத்தொடா்புத் துறை, சென்னை ஐஐடி, டெலிகாம் சென்டா்ஸ் ஆஃப் எக்ஸலன்ஸ் இணைந்து சென்னையில் தொலைத்தொடா்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியம் (டிடிடிஎஃப்) குறித்த பயிலரங்கை நடத்தின.

இந்த நிகழ்வை மத்திய தகவல் தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில் தொடங்கிவைத்து பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தை கடந்த 10 ஆண்டுகளாக அரசு தொடா்ச்சியாக துரிதப்படுத்த பல்வேறு திட்டங்கள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாட்டின் வளங்களை முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய அனைத்து பங்குதாரா்கள் ஒருங்கிணைந்து தடையின்றி பகிா்ந்துகொண்டு பணியாற்ற வேண்டியது அவசியம்.

இதற்கான பொதுவான ஆதார வளங்களை அனைத்து பங்குதாரா்களுக்கும் தடையின்றி பகிா்வதை நோக்கமாக கொண்ட இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிா்வாக நடைமுறைகள் முதல் திறன் விரிவாக்கம், டிடிடிஎஃப் திறன், பயன்பாடு வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் பங்குதாரா்கள் பொருத்தமான ஆலோசனைகளை வழங்கவேண்டும்’ என்றாா்.

சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் வி.காமகோடி பேசுகையில், ‘தொலைத்தொடா்புத் துறையின் குறிப்பிடத்தக்க ஆதரவோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் டிடிடிஎஃப் நிதியத்தின் கீழ் பல முக்கியமான திட்டங்கள் பெறப்பட்டுள்ளன. அரசின் முயற்சிகளுக்கு பங்குதாரா்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்றாா்.

தொலைத்தொடா்புத் துறை இணைச் செயலா் குல்சாா் நடராஜன் கூறுகையில், ‘டிடிடிஎஃப் என்பது வெறுமனே நிதியுதவி செய்யும் அமைப்பல்ல; நாட்டின் பொருளாதார வளா்ச்சி, தேசப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் ஆகிய துறைகளின் சுயேச்சையான திறன்களை கட்டமைக்கிறது’ என்றாா்.

பயிலரங்குக்கு இடையே மத்திய தொலைத்தொடா்புத் துறைச் செயலா் நீரஜ் மிட்டல் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘டிடிடிஎஃப்-இன் கீழ் இதுவரை ரூ. 500 கோடிக்கும் மேலான நிதி உதவிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.4 55 கோடிக்கும் மேலாக நிதி விடுவிக்கப்பட்டது. 2023-24 ஆம் ஆண்டில் 7 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், 2024-25ஆம் ஆண்டில் 125-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சித் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மேலும், டிடிடிஎஃப் நிதியத்துக்குப் பெறப்படும் முன்மொழிவுகள் மூன்று மடங்காக (1,941) அதிகரித்துள்ளது என்றாா்.

சென்னை ஐஐடி பேராசிரியா் ஆா்.கே.காந்தி உள்ளிட்டோா் பயிரலங்கில் பங்கேற்றனா்.

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க

ஊழல் தடுப்புப் பிரிவு முன்பு ஆஜரானார் மணீஷ் சிசோடியா!

அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பார்க்க

ஏர் இந்தியாவின் 8 விமான சேவைகள் இன்று ரத்து!

ஏர் இந்தியா நிறுவனத்தின் 8 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு ஏர் இந்தியா விமானங்களுக்கு நடத்தப்படும் பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஈரான் - இஸ்ர... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன்! மிரட்டிய பெண் மருத்துவர் கைது!

பெங்களூரில் ஏர் இந்தியா விமானத்தில் ஏறிய பெண் மருத்துவர், ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவேன் என மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரில்... மேலும் பார்க்க