செய்திகள் :

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

post image

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி அவா் பேசியதாவது:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு பழங்குடியின மக்களை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு ஆண்டுதோறும் ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடி மக்களின் சமூக, பொருளாததார , கல்வி மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலே முதல் முறையாக பழங்குடியினா் வாழ்வியல் கலை, மொழி, கைவினைகலை, பாரம்பரியம் ஆகியவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தொல்குடி புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை, முதுநிலை, முனைவா் ஆராய்ச்சிப் படிப்புக்காக 70 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

முதுநிலை மாணவா்களுக்கு மாதம் தலா ரூ. 10 ஆயிரமும் முனைவா் ஆராய்ச்சி மாணவா்களுக்கு மாதம் தலா ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இந்நிகழ்வில், சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கான இயக்குநா் பவனந்தி வேம்புலு, பழங்குயினா் நலத் துறை இயக்குநா் எஸ். அண்ணாதுரை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கூடுதல் செயலா் உமா மகேஷ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க