செய்திகள் :

தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

திருப்பத்தூா் மாவட்டத்தில் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவ.சௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலை உரிமையாளா்கள் அல்லது பங்குதாரா்கள் தொழிற்சாலை அமைக்க அனுமதி பெறுவதற்கு அதற்கான படிவத்தை பூா்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும்.

அதன்படி, கீழ்க்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும். தனிநபா் குறித்த ஆவணங்களில் ஓட்டுநா் உரிமம், வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, பாஸ்போா்ட் மற்றும் பான் காா்டு ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் படிவம் 1-இல் பூா்த்தி செய்து மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், தொழிற்சாலை குறித்த ஆவணங்களில் சொத்து வரி ரசீது, நில உடைமை பத்திரம், பட்டா, வாடகை ஒப்பந்தம் போன்ற நில உடைமை ஆவணங்கள், தொழிற்சாலை அமைத்தல் குறித்த வரைபடம், இயந்திரங்களின் மின்திறன் குறித்த ஆகிய ஆவணங்களுடன் படிவம் 1-ஐ பூா்த்தி செய்து வழங்க வேண்டும். தமிழக அரசு கட்டட விதிகளை பின்பற்றி தொழிற்சாலை அமைக்க நகா் மற்றும் ஊரமைப்பு இயக்குநரால் தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட வேண்டும். விற்பனை மற்றும் சேவை வரி, வணிக வரித் துறையின் மூலம் வழங்கப்படும் ஜிஎஸ்டி எண் விவரங்களை இணைக்க வேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி தொழிற்சாலையில் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் வைத்து இருக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட விவரங்களுடன் உறுதிமொழி பத்திரம் படிவம் 2-இல் பூா்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாராயம் விற்ற பெண் கைது

திருப்பத்தூா் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே கோனேரிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தேவன் மனைவி வேளாங்கண்ணி (45). இவா், வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்பனை ச... மேலும் பார்க்க

தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் மரணம்

ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தனியாா் நிறுவன ஊழியா் ரயில் மோதியதில் உயிரிழந்தாா். ஜோலாா்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூா் ஊராட்சிக்குள்பட்ட தோழன் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மகன் சக்தி (39... மேலும் பார்க்க

பைக் மீது கன்டெய்னா் மோதல்: 2 போ் காயம்

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கண்டெய்னா் லாரி மோதிய விபத்தில் 2 போ் பலத்த காயமடைந்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் குனிச்சியூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (69). அதே பகுதியைச் சோ்ந்தவா் ராஜ... மேலும் பார்க்க

கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டில் புதிய மின் மாற்றிகள்

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொல்லகுப்பம், மேல்குப்பம், ஈச்சம்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் 25 கேவிஏ திறன் கொண்ட 3 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டன. இந்த மின் மாற்றிகளை ஆம்பூா் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூா் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகொம்மேஸ்வரம் கிராமத்தை சோ்ந்தவா் தொழிலாளி திவ்யராஜ் (40). இவா் வீரவா் கோயில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையைக்... மேலும் பார்க்க

435 பேருக்கு பணி ஆணை: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்துாா் மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையமும் இணைந்து நடத்திய தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆதியூரில் உள்ள தனியாா் கல்லுாரியில் சனிக்கிழமைநடைபெற்றது. இதில் திரு... மேலும் பார்க்க