செய்திகள் :

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

post image

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

அனைத்து அணிகளின் வீரர்களும் அவர்களது அணியின் பயிற்சி முகாமில் இணைந்து ஐபிஎல் தொடருக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதா?

ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது கடுமையான முடிவு கிடையாது என அந்த அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானது கிடையாது. பிசிசிஐ-ன் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஐபிஎல் தொடரிலிருந்து நிறைய பேர் விலகியுள்ளனர். கடந்த காலங்களிலும் இதுபோன்று நடந்துள்ளது. அதன் பின், அவர்கள் மீண்டும் அணியில் நல்ல தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடியுள்ளனர்.

இதையும் படிக்க: பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடரிலிருந்து ஹாரி ப்ரூக் விலகியுள்ளது தில்லி கேபிடல்ஸ் அணிக்கு சற்று பின்னடைவைக் கொடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் போன்ற வீரர் ஒருவர் அணியிலிருந்து விலகினால், எந்த அணிக்கும் அது பின்னடைவாகவே இருக்கும். ஹாரி ப்ரூக்கை மறந்துவிட்டு ஒரு நொடி யோசித்துப் பாருங்கள். காயம் அல்லது தனிப்பட்ட குடும்ப காரணங்களின்றி ஐபிஎல் தொடரிலிருந்து விலகினால் தடை விதிக்கப்படும் என்ற விதி இருக்கிறது.

காயம் ஏற்பட்டு விலகியிருந்தால் அது வேறு. ஆனால், சாதாரணமான சூழலில் திடீரென அணியிலிருந்து வெளியேறினால், சம்பந்தப்பட்ட வீரர் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால், ஹாரி ப்ரூக் விவகாரத்தில் பிசிசிஐ-ன் முடிவு கடுமையானதாக தெரியவில்லை என்றார்.

இதையும் படிக்க: கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறி ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகிய ஹாரி ப்ரூக், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பி... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச்... மேலும் பார்க்க

மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுத... மேலும் பார்க்க

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க