செய்திகள் :

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

post image

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.

இதையும் படிக்க: ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

துணைக் கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ்

இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அக்‌ஷர் படேல் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருடன் இணைந்து டு பிளெஸ்ஸிஸ் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளார்.

தில்லி அணியின் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து டு பிளெஸ்ஸிஸ் பேசியதாவது: நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தில்லி அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அந்த அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். தில்லி அணியின் துணைக் கேப்டனாக செயல்படவுள்ளதை நினைத்து மகிழ்ச்சியாகவும், அணியின் துணைக் கேப்டனாக செயல்படுவதற்கு தயாராகவும் இருக்கிறேன் என்றார்.

இதையும் படிக்க: பாகிஸ்தானைவிட சிறந்தது இந்திய அணி: பிரதமர் மோடி

40 வயதாகும் டு பிளெஸ்ஸிஸ் கடந்த மூன்று சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியைக் கேப்டனாக வழிநடத்தி வந்தார். இருப்பினும், கடந்த ஆண்டு மெகா ஏலத்துக்கு முன்பாக டு பிளெஸ்ஸிஸை ஆர்சிபி தக்கவைக்கவில்லை.

ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் சுற்றில் ஏலம் போகாத டு பிளெஸ்ஸிஸ், ஏலத்தை நிறைவு செய்யும் விரைவு சுற்றில் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச்... மேலும் பார்க்க

மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுத... மேலும் பார்க்க

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க