செய்திகள் :

ஐபிஎல்: சென்னை - மும்பை போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் மார்ச் 19-ல் விற்பனை!

post image

ஐபிஎல் 2025 தொடரின் சென்னை - மும்பை அணிகளுக்கான போட்டி மார்ச் 23-ல் சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை மார்ச் 19 அன்று தொடங்குகிறது.

ஐபிஎல் 2025 தொடர் வருகின்ற மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பெங்களூரு ராயம் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னையில் மார்ச் 23-ல் நடைபெறும் இரண்டாவது போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், வரும் மார்ச் 19 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் விற்பனை தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விற்பனைக்காக டிக்கெட்டின் விலை ரூ. 1,700 முதல் ரூ. 7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி ஓய்வுபெறுவார் என்ற மனநிலை மக்களிடையே நிலவுவதால், டிக்கெட்டானது சிறிது நேரத்திலேயே விற்றுத்தீர்ந்து விடும் எனக் கூறப்படுகிறது.

சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹாரி ப்ரூக்குக்கு பிசிசிஐ விதித்த தடை கடுமையானதா? மொயின் அலி பதில்!

ஐபிஎல் தொடரில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஹாரி ப்ரூக் விளையாட பிசிசிஐ தடை விதித்தது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேத... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய உம்ரான் மாலிக்; கேகேஆர் அணியில் மாற்று வீரர் சேர்ப்பு!

ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக உம்ரான் மாலிக் விலகியுள்ளார்.ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்ப... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸில் ஆப்கன் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம்; காரணம் என்ன?

ஐபிஎல் தொடருக்காக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் இணைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளின் வீரர்க... மேலும் பார்க்க

கடந்த சீசனில் கேப்டன், இந்த முறை துணைக் கேப்டன்; தில்லி கேபிடல்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தில்லி கேபிடல்ஸ் அணியின் துணைக் கேப்டனை அந்த அணி நிர்வாகம் இன்று (மார்ச் 17) நியமித்துள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பி... மேலும் பார்க்க

மறக்க முடியாத பரிசளித்த தோனி: அஸ்வின் நெகிழ்ச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனக்கு மறக்க முடியாத பரிசளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.சென்னையில் சிஎஸ்கே அணி குறித்து எழுத... மேலும் பார்க்க

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி: பிரதமர் மோடி

இந்திய அணி பாகிஸ்தானை விட சிறந்த அணி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனிடம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.இதை... மேலும் பார்க்க