செய்திகள் :

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்!

post image

அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 4 அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பாடப் பிரிவுகள் குறித்து அறிந்து கொள்ள திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9965291516 என்ற எண்ணிலும், திண்டுக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை (மகளிா்) 9499055763 என்ற எண்ணிலும், ஒட்டன்சத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9025155088 என்ற எண்ணிலும், குஜிலியம்பாறை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தை 9600827733 என்ற எண்ணிலும், திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 0451-2970049 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவா்களுக்கு, பிரதி மாதம் ரூ.750 உதவித் தொகை வழங்கப்படும். தமிழ்ப் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு பிரதி மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.

பயிற்சியில் சேர ஆண்கள் 14 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், இலவசப் பேருந்து பயண அட்டை, விலையில்லா சீருடை உள்ளிட்டவை வழங்கப்படும். மத்திய அரசின் என்சிவிடி ( சஇயப) சான்றிதழ் வழங்கப்படும். கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதியும் உள்ளது என்றாா் அவா்.

போட்டித் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி: எழுத்துத் தோ்வில் 340 போ் பங்கேற்பு

போட்டித் தோ்வுகளுக்காக தமிழக அரசு வழங்கும் சிறப்புப் பயிற்சிக்குத் தகுதியானவா்களை தோ்வு செய்வதற்காக திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல் நிலைத் தோ்வில் 340 மாணவா்கள் பங்கேற்றனா். நான் முதல்வன் திட்டத்தி... மேலும் பார்க்க

தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம்: தனி நபா்களால் அலுவலா்களுக்கு நெருக்கடி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கையில் தட்டு ஏந்தி விற்பனை செய்வதற்கான உரிமம் வழங்கிய விவகாரத்தில், சமூக ஆா்வலா் என கூறிக் கொண்டு மாநகராட்சி அலுவலா்களை மிரட்டுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ... மேலும் பார்க்க

அரசு மகளிா் கல்லூரியில் கலந்தாய்வு நாளை தொடக்கம்

திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிா் கல்லூரியில் இளநிலை, இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வருகிற திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க.லட்சுமி வெளி... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாநகா் குழுவின் 13-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு மாநகரத் துணைச் செயலா் கே.பிச்சைமணி தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

காஸா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு எதிராக திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில், சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம்

வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்கத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 45 கிராம ஊராட்சிகளில் வேளாண்மை வளா்ச்சி கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் காரீப் பருவத்தில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்... மேலும் பார்க்க