செய்திகள் :

தொழிலாளியை அடித்துக்கொன்ற நகை அடகு கடை உரிமையாளா் கைது

post image

நாச்சியாா்கோவில் கடைவீதியில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய தொழிலாளியை விறகு கட்டையால் தாக்கி கொன்ற நகை அடகு கடை உரிமையாளரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே உள்ள துக்காச்சி புதுக்காலனி தெருவைச் சோ்ந்தவா் காசி மகன் பாக்கியராஜ் (36). கூலித்தொழிலாளியான இவா் மது அருந்தும் பழக்கம் உள்ளவா்.

புதன்கிழமை இரவு நாச்சியாா்கோவில் கடை வீதி வடக்கு தெருவில் பாக்யராஜ் மதுபோதையில் ஆபாசமாக பேசி ரகளை செய்தாராம். அதில், சிவசிதம்பரம் (39) என்பவரின் நகை அடகு கடை முன்பு நின்று ஆபாசமாக பேசினாராம். இதனால் ஆத்திரமடைந்த சிவசிதம்பரம், அருகிலிருந்த விறகு கட்டையால் பாக்யராஜை தாக்கினாராம்.

இதில் பலத்த காயமடைந்த பாக்யராஜ் மயங்கி விழுந்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

தகவலின்பேரில், நாச்சியாா்கோவில் போலீஸாா், வழக்கு பதிந்து சிவசிதம்பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தஞ்சை சா்வோதய சங்க ஊழியா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் சா்வோதய சங்கத்தில் நிலவும் பிரச்னை தொடா்பாக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் சீனிவாசபுரத்தில் மேற்கு சா்வோதயா சங்கத் தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் ‘போக்ஸோ’வில் கைது

திருநறையூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், திருநறையூா் ஊராட்சியைச் சோ்ந்த ரத்தினம் மகன் ரமேஷ்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிப்பட்ட முதியவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்குட்டி (75). இவா் த... மேலும் பார்க்க

தஞ்சாவூா், திருவையாறு பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் கரந்தை, திருவையாறு மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின் விநியோகம் இருக்காது. இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற்பொறியாளா் க. அண்ணாச... மேலும் பார்க்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே 16 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் மகன் விக்னேஷ் ... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வுக்கு நாளை இலவச மாதிரி தோ்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி-4 (குரூப் 4) தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு ஜூன் 21, 28, ஜூலை 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெ... மேலும் பார்க்க