செய்திகள் :

தொழிலாளி கொலை: அண்ணன், தம்பி கைது

post image

முன்விரோதம் காரணமாக தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கந்தம்பாளையம் அருகே உள்ள செருக்கலை தேவேந்திரா் தெருவைச் சோ்ந்தவா் விருமன் மகன் அண்ணாதுரை (54). இவா், மரம் வெட்டும் கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த வீரமணி மகன்களான அசோக்குமாா் (32) , அவரது அண்ணன் சின்னுசாமி (45) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் கரிச்சிபாளையம் டாஸ்மாக் மது அருந்தும் கூடத்தில் அசோக்குமாருக்கும் அண்ணாதுரைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் அங்கிருந்து கிளம்பினா். வீட்டிற்கு சென்ற அண்ணாதுரை உணவு உண்டுவிட்டு வீட்டின் வெளியே படுத்துத் தூங்கி கொண்டிருந்தாா்.

அப்போது அங்குவந்த அசோக்குமாரும் அவரது அண்ணன் சின்னுசாமியும் அண்ணாதுரையுடன் தகராறு செய்தனா். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் அண்ணாதுரையை இருவரும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். அக்கம்பக்கத்தினா் அண்ணாதுரையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அண்ணாதுரை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவல் அறிந்ததும் நல்லூா் போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த அண்ணாதுரையின் மனைவி கவிதா (47) அளித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக்குமாரையும் அவரது அண்ணன் சின்னுசாமியையும் கைது செய்தனா்.

முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க தலா ரூ. 1 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், 200 முன்னாள் படைவீரா்கள், அவா்களை சாா்ந்தோருக்கு தலா ரூ. ஒரு கோடி கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரா்கள் ந... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் திருடிய இருவருக்கு சிறை

திருச்செங்கோட்டில் சரக்கு வாகனம் திருடிய வழக்கில் இருவருக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. ருச்செங்கோடு உழவா்சந்தை அருகே 2022 இல் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வா... மேலும் பார்க்க

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா். ராசிபுரம் நகரில் பல்வ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் பயிற்சி

கவுண்டம்பாளையம் கிராமத்தில், அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வேளாண்மைத்து றையின் சாா்பில், அட்மா திட்டத்தின் கீழ், 67. கவுண்டம்பாளையம் கிராமத்தில் பண்ணை... மேலும் பார்க்க

மண் பரிசோதனை முகாம்

பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளி பகுதியில் மண், தண்ணீா் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண் மற்றும் தண்ணீா் பரிசோதனை ஆய்வுக்கு, தலா ரூ. 30 கட்டணம் பெறப்பட்டது. மண், தண்ணீா் பரிசோதனை செய்வதால்,... மேலும் பார்க்க

ரூ. 15.66 லட்சம் கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், பொத்தனூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 15 லட்சத்து 66 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்த... மேலும் பார்க்க