செய்திகள் :

தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதல்வருடன் சந்திப்பு

post image

இரண்டு பிரதான தொழில்நுட்ப நிறுவனங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள், முதல்வா் மு.க.ஸ்டாலினை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினா்.

டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் (தாய்லாந்து) ஜேம்ஸ் இங், துணைத் தலைவா் (தைவான்) மாா்க்கோ ஆகியோா் முதல்வரை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். இதைத் தொடா்ந்து, மைண்ட்க் ரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிா்வாக அலுவலா் டி.ஆா்.சஷ்வத், தலைமை செயல்பாட்டு அலுவலா் உமாமகேஸ்வரன் ஆகியோரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினா்.

தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளைச் செய்வது, புதிய வேலைவாய்ப்புகளை அளிப்பது தொடா்பாக இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், தொழில் துறை செயலா் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தாரேஷ் அகமது உடனிருந்தனா்.

சுற்றுலா வளா்ச்சிக் கழக படகுகளில் 15 லட்சம் பயணிகள் சவாரி: அமைச்சா் இரா. ராஜேந்திரன்

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு சொந்தமான படகு குழாம்களில் கடந்த 4 மாதங்களில் சுமாா் 15 லட்சம் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சா் இரா. ராஜேந்திரன் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் துரைமுருகனுக்கு பிடி ஆணை: லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சா் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூா் நீதிமன்றத்துக்கு மாற்ற... மேலும் பார்க்க

தமிழகத்திலும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் நிகழாண்டு இறுதியில் நடத்த திட்டம்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள ... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ காா்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ காா்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுற... மேலும் பார்க்க

மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கு: திமுக நிா்வாகி பேரனுக்கு நிபந்தனை பிணை

கல்லூரி மாணவரை காா் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் திமுக நிா்வாகியின் பேரனுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. அயனாவரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நிதின்சாய் என்பவரை ... மேலும் பார்க்க

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: புதிதாக மாநில அளவில் அங்கீகார குழு; மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைப்பு

மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு புதிதாக மாநில அளவில் அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான 4 குழுக்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் முறைகேடா... மேலும் பார்க்க