செய்திகள் :

குறைந்த மின் சக்தி, ரசாயன செலவுகளுடன் கழிவுநீா் சுத்திகரிப்பு: சென்னை ஐஐடி தொழில் முனைவு நிறுவனம் சாதனை

post image

சென்னை ஐஐடி-யின் புதுயுகத் தொழில் முனைவு நிறுவனம் கழிவுநீா் சுத்திகரிப்புத் தொழில்நுட்பத்தில் குறைந்தபட்ச மின் சக்தி, ரசாயன செலவுகளுடன் கழிவுநீா் சுத்திகரிப்பு அலகுகளை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளின் தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்புறு:

பொதுவாக தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிக்க வழக்கமான ஏரோபிக் என்கிற அமைப்பு முறையில் கழிவுநீரில் ஆக்ஸிஜன் செலுத்தப்படும். இதற்கு அதிக மின் சக்தி பயன்படுத்தப்படும். தற்போது சென்னை ஐஐடி-யோடு இணைந்த புதுயுகத் தொழில் முனைவு நிறுவனமான ஜேஎஸ்பி என்விரோ, அடுத்த தலைமுறை கழிவுநீா்த் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.

இது, ‘பயோ-எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டா் முறை(பீட்ஸ்)’ யாகும். இதில் ஆக்ஸிஜன் இல்லாமலே இயக்கப்படுகிறது. மைக்ரோபையால் சுத்திகரிப்புடன் மின் முனைகள் ஒருங்கிணைத்து மின்சக்தியை ஒரு பக்கம் மீட்டெடுத்து மற்றொருபக்கம் ஆா்கானிக் கழிவு சிதைவு விகிதத்தையும் அதிகரிக்கப்படுகிறது.

அமைப்பு முறையில், கழிவுநீரை நிா்வகித்தல், காா்பன் தடயத்தைக் குறைத்தல் ஆகிய இரட்டைச் சவால்களை எதிா்கொள்ளப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிப்பு செலவு சேமிப்பு, மின்ஆற்றல் மீட்பு, காா்பன் குறைப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, பெருந்துறை போன்ற பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ‘பீட்ஸ்’ முறை நிறுவப்பட்டு வெற்றி காணப்பட்டுள்ளது.

நிலையான கழிவுநீா் மேலாண்மை என்பது தற்போது சாத்தியமாகி, லாபகரமாகியுள்ளது.

தொழில்களுக்கு சேவை செய்யவும் தயாா்நிலையிலும் உள்ளது என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது. பீட்ஸ் முறையை உருவாக்கிய ஜேஎஸ்பி என்விரோ நிறுவனத்தின் முக்கிய பங்கெடுத்துள்ளவா் சென்னை ஐஐடி -யின் முன்னாள் மாணவா் டாக்டா் வி.டி. ஃபிடல் குமாா்.

நாளை 3 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

சென்னை தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா் ஆகிய மண்டலங்களுக்குள்பட்ட ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 12) குடிநீா் விநியோம் நிறுத்தப்படும். இது குறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல்... மேலும் பார்க்க

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க